கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இரவிலும் தொடர்ந்த ஆசிரியர் "கவுன்சிலிங்'

மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கவுன்சிலிங், நேற்று இரவு 12 மணியை கடந்தும், தொடர்ந்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் மதுரை மாவட்டத்தில் 391 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு டிச.,9 ல், மாநகராட்சி இளங்கோ பள்ளியில் கவுன்சிலிங் துவங்கியது. முதல் நாளில், 92 பேருக்கு பணியிடம் ஒதுக்கப் பட்டது. 2வது நாளான நேற்று, 200 பேருக்கு பாடங்கள் வாரியாக பணியிடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஆனால், இரவு 7 மணி வரை 100 பேருக்கு மட்டுமே, பணியிடம் ஒதுக்கியிருந்தனர். இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான "கவுன்சிலிங்' துவங்க உள்ளதால், எஞ்சியுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், இரவு 12 மணியை கடந்தும், கவுன்சிலிங் தொடர்ந்தது. பெண் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கணவருடன் இரவு முழுவதும் காத்திருந்து, "கவுன்சிலிங்'ல் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்க...