கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மின்னல் ஏவுகணை

 
உலகின் அதிவேக "சூப்பர்சோனிக்' ஏவுகணையை கடலுக்கடியில் இந்தியா ஜனவரியில் பரிசோதிக்கவுள்ளது. எதிரியின் போர்க்கப்பல்களை மறைந்திருந்து தாக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை கடற்படையின் பலத்தை பலமடங்கு கூட்டும்.

சிறப்புகள்
* 290 கி.மீ.,க்கு அப்பால் இருக்கும் இலக்கை 6 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் தாக்கும்.
* இந்த ஏவுகணை இந்தியா-ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பு.
* சீனாவின் "சன்பர்ன் சூப்பர்சோனிக்' ஏவுகணையை விட வேகமானது.
* அமெரிக்கா, பிரிட்டனின் "டொமாஹக்' ஏவுகணையை விட மூன்று மடங்கு வேகமானது.
* குறைவான உயரத்தில் பறக்கும் "சூப்பர்சோனிக்' உளவு விமானங்கள் கூட இதை கண்டறிவது கஷ்டம்.
* இலக்கை தாக்கும் போது கடலுக்கடியில் 10 மீட்டர் ஆழத்துக்கும் குறைவாக சென்று தாக்கும்.

தாக்கும் விதம்
1. "பான்டூன்' எனப்படும் நீர்மூழ்கி உதவியுடன் ஏவுகணை ஏவப்படும் ஆழத்துக்கு கொண்டு செல்லப்படும்.
60 மீ ஆழத்திலிருந்து ஏவப்படும்.
2. கடலுக்கடியிலிருந்து நீர்மட்டத்தை 3 வினாடியில் கடந்து வெளியேறும்.
3. கடக்கும் தூரத்துக்கேற்ப உயரம் சென்று இலக்கை நோக்கி திரும்பும்.
4. திட எரிபொருள் "சூப்பர்சோனிக்' வேகத்துக்கும், திரவ எரிபொருள் ஏவுகணையின் இன்ஜின் வேகத்துக்கும் உதவுகிறது.
5. இலக்குக்கு சிறிது தூரத்துக்கு முன்னர் கடலுக்கடியில் சென்று தாக்கும்.

எதிரி போர்க்கப்பல்:ஒரு ஏவுகணையின் மதிப்பு ரூ.8-10 கோடி மதிப்புள்ளதாகும். இது 300 கிலோ வெடிபொருள்களை சுமந்து சென்று 290 கி.மீ.,ரம் தாக்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் வேகம்2.8 மாக் வேகம் ஆகும் 1 மாக் (ஒலி) வேகம் என்பது மணிக்கு 1195 கி.மீ.,

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...