கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தன்னம்பிக்கை விதைக்கும் விஷால்!

'கேமராவைக் கிளிக் செய்தால் அதில் இருந்து வரும் ஒளி, கேமராவின் லென்ஸ் வழியே சென்று, பிறகு எடுக்க வேண்டிய பகுதியில் புகைப்படமாக மாறுகிறது. இதுதான் லா ஆஃப் மோஷன் இன் லைட் எனர்ஜி (Law of Motion in Light Energy).

'ஒரு கல்லைக் கிணற்றுக்குள் போட்டால், அது மூழ்கிவிடும். காரணம், ஒரு பொருளைத் தண்ணீரினுள் போடும்போது, அது காற்று மண்டலத்தில் இருந்து காற்றைத் தள்ளி, பின்பு நீரின் மேலே ஒரு அழுத்தத்தை உண்டாக்கும்.’

இவற்றை எல்லாம் 6-ம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தில் படிப்பதுபோல இருக்கா? ஆனால், இதை எல்லாம் சொல்லி ஆச்சரியத்தில் மூழ்கச்செய்வது 8 வயது விஷால். 'சங்கல்ப்’ பயிற்சி மையத்தில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் இவர், ஆட்டிஸம் (AUTISM) சுட்டி...

... ஓவியம், ஸ்கேட்டிங் போன்றவற்றில் கலக்கும் விஷால், அறிவியலின் காதலன். கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சயின்ஸ் கிளப்பில் பங்கேற்றார். அங்கே கேட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில்களை டைப்செய்து காண்பித்து எல்லோரையும் வியப்படையச் செய்தார்.

இதுவரை 10 வீடியோ கேம்ஸ்களை வடிவமைத்து இருக்கிறார். இவற்றுக்கு எல்லாம் சிகரமாக, மெடோ ஆஃப் மூட்ஸ் (MEADOW OF MOODS) என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார் விஷால். இந்தப் புத்தகத்தில், இதுவரை தான் உணர்ந்த மன நிலைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தை சென்னையில் உள்ள லேண்ட்மார்க் அல்லது ஃபிலிப்கார்ட் கடைகளில் பெறலாம்.

'இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வரியும் என்னுடைய உணர்வுகள். ஒவ்வொரு பக்கமும் என்னுடைய ஓவியங்களை அடிப்படையாகவைத்து வடிவமைத்தது. என்னைப் போன்ற சிறுவர்களின் உணர்வுகளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதினேன். எங்களாலும் சாதனைபுரிய முடியும்’ என்று எழுதிக் காண்பித்து புன்னகைக்கிறார் விஷால்.

அந்தப் புன்னகையில் மின்னுகிறது 24 கேரட் தன்னம்பிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...