கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஹோவர்ட் கார்ட்டர்

 
தங்கம், புதையல், மம்மி, ரகசிய வழி, விஷப்பூச்சிகள், திருடர்கள் என வாழ்க்கை முழுக்க செம த்ரில்லோடு கழித்த ஹோவர்ட் கார்ட்டர் எனும் அகழ்வராய்ச்சி நிபுணரின் இணையற்ற சாதனை நிகழ்ந்த தினம் இன்று (பிப்.16).

எகிப்தில் டூட்டன்ஹேமன் எனும் இளவயதில் மரணமடைந்த எகிப்திய இளவரசரின் கல்லறையை கண்டறிந்ததுதான் இவரின் சாதனை. அந்த மன்னனின் கல்லறையில் எண்ணற்ற புதையல் கொட்டிக்கிடப்பதாக எல்லாருக்கும் தெரியும், ஆனால் அது எங்கே இருந்தது எனத்தான் பலகாலமாக மக்கள், கொள்ளையர்கள், ஆய்வாளர்கள் என எல்லாரும் அலைந்தனர்.

இவரும் அலைந்தார். அதற்காக தன் பாட்டி கொடுத்த உளியை பல காலம் காப்பாற்றி வைத்து இருந்து பயன்படுத்தினார் என்பது அவரின் எல்லையில்லா அன்பிற்கு சாட்சி.

தங்கமும், நகைகளும் மேலும் பல பொருட்களும் உள்ளே கொட்டிக்கிடந்த இந்த கல்லறை எவ்வளவு பிரமாண்டமானது. கண்டுபிடிக்கப்பட்டு ஏறத்தாழ எட்டு வருடங்கள் ஒட்டுமொத்தமாக இந்த கல்லறையில் உள்ள பொருட்களை மீட்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு பின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்க முழுக்க இந்தக் கதையை சொல்லி இன்றைய மம்மிக்களை வைத்து மிரட்டும் படத்துக்கெல்லாம் அடிகோலினார்.

‘‘உங்களின் ஆற்றல் நிலைக்கட்டும், பல்லாயிரம் வருடங்களை களியுங்கள்; கண்களில் ஆனந்தத்தை தேக்கி கொள்ளுங்கள்... இரவே உன் சிறகுகளை அழியா விண்மீன்களாக என்மீது விரிப்பாயாக!’’ எனும் வரிகள் இவரின் கல்லறையில் நமக்கான கதையை காலமெல்லாம் சொல்லுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...