கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சார்ல்ஸ் வீட்ஸ்டோன்...

 
சார்ல்ஸ் வீட்ஸ்டோன்... ஓர் இணையற்ற இயற்பியல் அறிஞர். அப்பா இசைக்கருவிகள் விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கோ இலக்கியத்தின் மீது நாட்டம் போனது. சில கவிதைகள் எழுதினார்.

மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த பொழுது வோல்டாவின் பரிசோதனைகள் எனும் பிரெஞ்சு மொழி புத்தகம் இவருக்கு கிடைத்தது. ஆங்கிலேயரான இவர் சிறுக சிறுக பணம் சேர்த்து ஒரு அகராதியை வாங்கி அதைக்கொண்டு அந்த நூலை படித்து முடித்தார். அதில் சொன்னபடி ஒரு பேட்டரியை வடிவமைத்து முடித்ததும் அவர் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

மனிதர் வசிய யாழ் என சொல்லிக்கொண்டு ஒரு கருவியை உருவாக்கினார். அது பியானோ உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளின் இசைக்குறிப்புகளை எழுப்பியது. ஒலியும் ஒளி போலவே பயணம் செய்கிறது என்றும் அதைகொண்டு செய்திகளை கடத்த முடியும் எனவும் சொன்னார்.

கலைடோபோன் என ஒரு கருவியை உருவாக்கினார். ஒலிக்குறிப்புகளை வெளிச்ச உருவங்களாக அது வரைந்து காட்டியது. ஒளியின் திசை வேகத்தை கண்டறியவும் முயன்றார்.

முதன்முதலாக நிறப்பிரிகை உமிழ்வு கோடுகளை கண்டறிந்து ஒளிக்கதிர் ஆய்வுகளில் புரட்சி செய்தார். மின்சார சக்தியால் இயங்கும் ஐந்து ஊசி டெலிகிராப் கருவியை வடிவமைத்தார். இதற்கு ஷில்லிங் எனும் அறிஞரின் கருவியை ஒத்திருந்தாலும் அதை சந்தைப்படுத்தி பலரும் பயன்படுத்தும் வகையில் இவரே மாற்றினார். 1837 இல் இரண்டரை கிலோமீட்டர் தூரத்துக்கு முதல் செய்திக்குறிப்பு இதன் மூலம் அனுப்பப்பட்டது.

இது அவ்வளவாக முதலில் பிரபலமடையவில்லை. பின் 7,500 கிலோமீட்டர் தூரத்துக்கு செய்தி குறிப்புகளை செலுத்தும் அளவுக்கு பிரபலமானது. முக்கிய காரணம் ஜான் டாவெல் எனும் கொலைகாரனை கண்டுபிடிக்க இக்கருவி உதவி இருந்தது.

எந்த கண்டுப்பிடிப்பிலும் பணம் ஈட்ட எண்ணாத இவர் இந்த டெலிகிராப்பில் மட்டும் பணம் பார்த்தார்; அவர் ஆட்டோமாடிக் ட்ரான்ஸ்மீட்டரை உருவாக்கினார். மூளை இரண்டு வெவ்வேறு படங்களை இரண்டு கண்கள் வழியாக வாங்கி அதை முப்பரிமாண படமாக தருகிறது என விளக்கி அதைக்கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கும் ஸ்டீரியோஸ்கோப் கருவியை உருவாக்கினார். -இதுவே இன்றைய முப்பரிமாண படக்கருவிகளுக்கு முன்னோடி. ஏற்கெனவே ஹன்டர் கிறிஸ்டி கண்டுப்பிடித்திருந்த மின்பால அமைப்பை மேம்படுத்தி எளிமையாக்கி அதன் மூலம் மின்சாரம் மற்றும் மின்தடையை ஓம் விதிப்படி எளிமையாக கண்டுபிடிக்கும் வீட்ஸ்டோன் பாலத்தை உருவாக்கினார்.

மின்தடையை கொண்டு கடத்தியின் நீளத்தையும் இந்த அமைப்பில் அளவிட முடியும். மேடையில் பேச வராத இவரின் கண்டுப்பிடிப்புகள் காலத்தை கடந்தும் அவருக்காக பேசுகின்றன என்றால் அது மிகையில்லை. பிப்.6 : அவரது பிறந்த நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...