கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சார்லஸ் டிக்கன்ஸ்.

 
நெகிழவைத்த நாயகன்!

ஒரு கதாசிரியன் எப்படி இருக்க வேண்டும்? இப்படியெல்லாம் இருக்க கூடாது என பாடம் நடத்திய பலபேரை பார்த்து இருப்போம்! ஆனால், அவனுள் மனிதநேயம் பொங்கிப்பாய வேண்டும் என சொல்லாமல் சொல்லியவர் சார்லஸ் டிக்கன்ஸ்.

இளம் வயதில் அப்பாவை கடனால் சிறைக்கு தாரைவார்த்து விட்டு வறுமையில் உழன்ற இவர் தன் எழுத்தின் வரும்படியை குழந்தை தொழிலாளர்களுக்கு செலவு செய்தார். எழுத்திலும் அவர்களின் இன்னல்களை வடித்தார்.

வாசகனின் விருப்பங்களை அன்றைக்கு எழுத்தாளர்கள் சட்டை செய்வதில்லை என்பதை உணர்ந்த இவர் தொடர் கதை பாணியை பிரபலப்படுத்தி ஒவ்வொரு அத்தியாயத்திற்கு பிறகும் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையை மாற்றி நெகிழவைத்த நாயகன்!

ஏகத்துக்கும் சம்பாதித்த இவர் பாதிக்கப்பட்ட வாழ்க்கையில் நலிவுற்ற பெண்களுக்கும் ஏகத்துக்கும் உதவினார். தொடர்வண்டி விபத்தில் இவருக்கு பின் இருந்த பலபேர் காயமுற அவர்களை காப்பாற்றி விட்டு தன் பிரபலமான நாவலை ஆரமர விபத்துப் பகுதியில் இருந்து தேடி எடுத்துக்கொண்டு கிளம்பினார்!

கண்ணீரில் அவர் வாழ்க்கை தோய்ந்தாலும் அவரின் எழுத்தின் தரம்தான் அவரை காலங்களைக் கடந்து நிற்க வைக்கிறது!

வாழ்ந்த வாழ்க்கையை எழுத்தில் வடிக்க வரம் வேண்டும் அல்லவா?

அவரின் பிறந்தநாள் இன்று (பிப்.7)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...