கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 நீட் தேர்வில் தமிழக அளவில் 710 மதிப்பெண்கள் பெற்று வெள்ளகோவில் மாணவர் முதலிடம்...

 (வெள்ளக்கோவில் மாணவர் முதலிடம்)

நாமக்கல், அக்.16: நீட் தேர்வில் தமிழகத்தில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். நிகழாண்டில், திருப்பூர் மாவட்டம்,வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

மாணவர் ஸ்ரீஜன் கூறியதாவது: வெள்ளக்கோவில் எனது சொந்த ஊர். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. மீண்டும் எழுதுவதற்கு முயற்சித்து நாமக்கல்லில் பயிற்சி பெற்றேன். அதனால் இந்த ஆண்டு 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...