கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்...

 சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ அளிக்கும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 10 கடைசி நாளாகும்.

2020-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பெற்றோருக்கு ஒரே ஒரு மகளாக இருக்கும் மாணவிகள், இரண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, பிளஸ் 2 படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான பரிசுக்கும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித் தொகைக்கு, ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து, பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தகுதிபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...