கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாணவி தீக்சா மற்றும் அவரது தந்தைக்கு போலீசார் 2ஆவது முறையாக சம்மன்...

 


நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றது தொடர்பான விவகாரத்தில் சிக்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாணவி மற்றும் அவரது தந்தைக்கு 2ஆவது முறையாக போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சென்னை பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நேற்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகக் கோரி மாணவி தீக்சா, அவருடைய தந்தையும் பல்மருத்துவருமான பாலசந்திரன் ஆகியோருக்கு  சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகாததுடன், இருவரிடம் இருந்தும் எந்த தகவல் வரவில்லை. இதைத் தொடர்ந்து 2ஆவது முறையாக மீண்டும் அவர்களுக்கு பெரியமேடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Administrators App New Version: 0.4.1 - Updated on 18-02-2025 - Health & Stem Module Changes. Bug Fixes & Performance Improvements

  *  TNSED Administrators App *  What's is new..? * 🎯 Health & Stem Module Changes... * 🎯  Bug Fixes & Performance Improvement...