கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...

 


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் தற்போது 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுவரை பள்ளிகளில் பெரிதளவில் கொரோனா பரவல் கண்டறியப்படாத நிலையிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை முடிவெடுக்காமல் உள்ளது. இதற்கிடையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.


நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 110வது விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


மேலும் பேசிய அவர், அடுத்த கல்வியாண்டுக்கு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் செலுத்தி உள்ள பொதுத்தேவு கட்டணத்தை திருப்பி அளிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...