கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு



06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.


மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் இருந்து தேர்வான 


🖤 அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் 100 பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்க நிதியுடன் பாராட்டுச் சான்று - கேடயத்துடன் 

*அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது*


❤️ கற்றல் - கற்பித்தல் உள்ளிட்ட பன்முக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 76 பள்ளிகளுக்கு *பேராசியர் அன்பழகன் விருது* 


💙 கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற 4,552 தொடக்கப் பள்ளிகளுக்கு சிறப்பு விருது ஆகியவற்றை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்கி, வாழ்த்தி மகிழ்ந்தோம். 


காவிரி கரைபுரண்டு ஓடும் திருச்சி மாநகரில் நம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கமித்த முப்பெரும் விழா இனிய அனுபவமாக அமைந்தது.



மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு



மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு


வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்ட  தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில் எழுச்சியோடு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோம்.


“மதயானை நூலை எழுதி வெளியிட்டதற்காக பாராட்டு விழா, நல்லாசிரியர் மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா” என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.


“உங்கள் குடும்பத்தின் ஒருவராக இங்கு வந்துள்ளேன். எப்போதும் உங்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பேன்” என உரையாற்றி மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கினோம்.


எழுச்சிமிகு இவ்விழாவை ஒருங்கிணைத்த அனைவருக்கும் அன்பும். நன்றியும்.



SLAS அறிக்கை - திருப்பூரில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 5



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 5 திருப்பூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினோம்.


5 கல்வி வட்டாரங்களில் இருந்து 600 பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட #SLAS அறிக்கையின் அடிப்படையில், தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்காக எடுத்துவரும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி நம்பிக்கையளித்தோம்.


மாவட்டம் வாரியாக நடத்துகின்ற ஆய்வுக் கூட்டத்தின் 5ஆவது மாவட்டமாக திருப்பூர் அமைந்தது.


NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு



NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு


திருச்சி மாவட்டம் ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் (National Means-cum-Merit Scholarship-NMMS) வெற்றி பெற்றுள்ளார்கள்.


இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.ராணி அவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர் திருமிகு.மணிகண்டன் அவர்களையும் திருச்சியில் நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கெளரவித்தோம்.


SLAS அறிக்கை - தர்மபுரியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4 தர்மபுரியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடனான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்த மறுநாளே, மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.


அந்த வரிசையில் 4-ஆவது ஆய்வுக் கூட்டத்தை தர்மபுரியில் நடத்தினோம். “தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு எனும் ஒற்றை குறிக்கோளை நோக்கி ஓராண்டு பயணிப்போம். தங்களின் முயற்சிகளும், உற்சாகமும் பெரும் நம்பிக்கை அளிக்கிறது” என உரையாற்றினோம்.


#SLAS அறிக்கையை கையிலெடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கவுள்ளோம். இப்பயணம் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது!


SLAS அறிக்கை - கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாவட்ட வாரியாக பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 3ஆவது சந்திப்பு ஓசூரில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். #SLAS அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை முன்வைத்து, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.


“அடுத்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கற்றல் அடைவுகளில் முன்னேறியுள்ளது என #SLAS அறிக்கையின் முடிவுகளில் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே மேற்கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்” என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - நாகையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2 நாகையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


திருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து 2ஆவது மாவட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினோம்.


மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட கற்றல் அடைவு #SLAS அறிக்கையை முன்வைத்து இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். 2 கல்வி வட்டாரங்களில் இருந்து மொத்தம் 170 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு, கற்பித்தல் முறைகளில் தாங்கள் அடுத்து மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.


‘நாகை மாவட்டம் கற்றல் கற்பித்தலில் முன்னேறியுள்ளது’ என அடுத்தாண்டு #SLAS அறிக்கை தெரிவிக்க வேண்டும்’ என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


“இதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தோம். அவ்வகையில் முதல் ஆய்வுக்கூட்டம் #திருச்சி -யில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்தாலோசித்தோம்.


மாவட்டத்தின் 5 கல்வி வட்டாரங்களில் இருந்து 463 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கி, நம்பிக்கையோடு விடைபெற்றோம்.


அரசுப்பள்ளிகளில் Water Bell Scheme - அமைச்சர் அன்பில் மகேஷ்



அரசுப்பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


"Water Bell Scheme in Government Schools" - Minister Anbil Mahesh


"அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் கேரளாவில் நடைமுறையில் உள்ளது


வாட்டர் பெல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்


திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 


திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்




ஏப்ரல் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்



1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்



 1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்


1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?


"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"


மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

- பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களது தகவல்

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (28.03.2025) தொடக்கம் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு


தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 671, நாள் : 28-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



New Teacher appointment and Promotion case - School Education Minister's response in the Legislative Assembly



 புதிய ஆசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதில் 


The Minister of School Education's response in the Legislative Assembly regarding the new teacher appointment and promotion case




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Why should we sacrifice our policy for someone else's benefit? - Minister Palanivel Thiagarajan


 எங்கள் கொள்கையை யாரோ ஒருவர் நலனுக்காக ஏன் விடவேண்டும்? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


Why should we sacrifice our policy for someone else's benefit? - Minister Palanivel Thiagarajan


உத்திரப் பிரதேசம்,  பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மும்மொழிகள் தெரியும். அங்கெல்லாம் எத்தனை குழந்தைகளுக்கு இரு மொழிகள் நன்கு தெரியும்.


கல்வித்துறையில் இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு அடைந்த வெற்றியை விட, அதிக வெற்றியை மும்மொழி கொள்கையால் பெற்ற ஒரு மாநிலத்தை குறிப்பிடுங்கள். 


நாங்கள் ஏன் எங்கள் கொள்கையை யாரோ ஒருவரின் நலனுக்காக கைவிட வேண்டும் என எடுத்துரையுங்கள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


இந்தி மொழியை ஒருவர் ஏன் படிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையால் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்கள் என்ன வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. குறைந்தபட்சம் இரு மொழிக் கொள்கையையாவது அவர்கள் கடைபிடிக்கிறார்களா?. மும்மொழிக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாட்டின் கல்வியை விட சாதித்திருக்கிறோம் என ஒரே ஒரு எடுத்துக்காட்டை, ஒரு மாநிலத்தை எடுத்துக்காட்டாக கூறுங்கள். நாங்கள் அதன்பிறகு மும்மொழிக் கொள்கையை பற்றி சிந்திக்கிறோம். இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கும்போது, எங்கள் மீது ஏன் தேவையில்லாமல் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள்.



மூன்று மொழிகளுக்கு பதிலாக அறிவியல் துறையில் இப்போது வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யுங்கள். செயற்கை நுண்ணறிவு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி பள்ளிக் கல்வியில் சேர்க்கலாமே. இது தான் மாணவர்களின் வளர்ச்சியில்செலுத்தும் உண்மையான அக்கறையாக இருக்க முடியும். இதைத் தவிர்த்து எந்தவொரு முன் எடுத்துக்காட்டும் இல்லாமல், சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டை மத்திய அரசு நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?" என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்





Students protest in support of AHM accused of sexual harassment due to someone's stimulating - Law Minister Mr. Raghupathi's interview



 யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள், பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் சிக்கிய உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் பேட்டி


Students protest in support of Assistant Headmaster accused of sexual harassment due to someone's stimulating - Law Minister Mr. Raghupathi's interview


புதுக்கோட்டை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு - யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் விளக்கம்


ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையால் தான் பாலியல் சீண்டல் விவகாரத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்


மாணவிகளின் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட்


யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் பேட்டி




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Minister Anbil Mahesh meeting with the President



 குடியரசுத் தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு


School Education Minister Mr. Anbil Mahesh meeting with the President


டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு.


ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை மணப்பாறையில் நடைபெற உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார்.


'Iron Antiquity' book launch that will change the perspective of Indian history - Foundation laying ceremony for Keezhadi & Gangaikonda Cholapuram Museums & Keezhadi website launching ceremony - Invitation



 இந்திய வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' நூல் வெளியீடு - கீழடி & கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் & கீழடி இணையதளம் தொடங்கி வைத்தல் விழா - அழைப்பிதழ்


'Iron Antiquity' book launch that will change the perspective of Indian history - Foundation laying ceremony for Keezhadi & Gangaikonda Cholapuram Museums & Keezhadi website launching ceremony - Invitation


இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin தொடங்கி வைக்கும்  நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது.

அனைவரும் வருக.






Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு


Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டவுடன், அதனை ஆராய ஒரு குழு அமைத்து விரைவில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 309ல் அறிவித்த  பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு (Old Pension Scheme) பதிலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்


- தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிவிப்பு




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hi-tech labs in 6,990 middle schools to become operational on July 15

தமிழ்நாட்டில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஜூலை 15-ல் செயல்பாட்டுக்கு வருகின்றன தமிழ்நாட்டில் உள்ள 6,990 அரசு நடுந...