QR Code மூலம் மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பாராட்டு
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
ஏப்ரல் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு? - பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"
மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்
- பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களது தகவல்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (28.03.2025) தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 671, நாள் : 28-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
New Teacher appointment and Promotion case - School Education Minister's response in the Legislative Assembly
புதிய ஆசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதில்
The Minister of School Education's response in the Legislative Assembly regarding the new teacher appointment and promotion case
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
Why should we sacrifice our policy for someone else's benefit? - Minister Palanivel Thiagarajan
எங்கள் கொள்கையை யாரோ ஒருவர் நலனுக்காக ஏன் விடவேண்டும்? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Why should we sacrifice our policy for someone else's benefit? - Minister Palanivel Thiagarajan
உத்திரப் பிரதேசம், பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மும்மொழிகள் தெரியும். அங்கெல்லாம் எத்தனை குழந்தைகளுக்கு இரு மொழிகள் நன்கு தெரியும்.
கல்வித்துறையில் இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு அடைந்த வெற்றியை விட, அதிக வெற்றியை மும்மொழி கொள்கையால் பெற்ற ஒரு மாநிலத்தை குறிப்பிடுங்கள்.
நாங்கள் ஏன் எங்கள் கொள்கையை யாரோ ஒருவரின் நலனுக்காக கைவிட வேண்டும் என எடுத்துரையுங்கள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இந்தி மொழியை ஒருவர் ஏன் படிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையால் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்கள் என்ன வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. குறைந்தபட்சம் இரு மொழிக் கொள்கையையாவது அவர்கள் கடைபிடிக்கிறார்களா?. மும்மொழிக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாட்டின் கல்வியை விட சாதித்திருக்கிறோம் என ஒரே ஒரு எடுத்துக்காட்டை, ஒரு மாநிலத்தை எடுத்துக்காட்டாக கூறுங்கள். நாங்கள் அதன்பிறகு மும்மொழிக் கொள்கையை பற்றி சிந்திக்கிறோம். இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கும்போது, எங்கள் மீது ஏன் தேவையில்லாமல் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள்.
மூன்று மொழிகளுக்கு பதிலாக அறிவியல் துறையில் இப்போது வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யுங்கள். செயற்கை நுண்ணறிவு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனைப் பற்றி பள்ளிக் கல்வியில் சேர்க்கலாமே. இது தான் மாணவர்களின் வளர்ச்சியில்செலுத்தும் உண்மையான அக்கறையாக இருக்க முடியும். இதைத் தவிர்த்து எந்தவொரு முன் எடுத்துக்காட்டும் இல்லாமல், சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டை மத்திய அரசு நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்?" என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
Students protest in support of AHM accused of sexual harassment due to someone's stimulating - Law Minister Mr. Raghupathi's interview
யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள், பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் சிக்கிய உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் பேட்டி
Students protest in support of Assistant Headmaster accused of sexual harassment due to someone's stimulating - Law Minister Mr. Raghupathi's interview
புதுக்கோட்டை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு - யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் விளக்கம்
ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையால் தான் பாலியல் சீண்டல் விவகாரத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்
மாணவிகளின் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட்
யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் பேட்டி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
Minister Anbil Mahesh meeting with the President
குடியரசுத் தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு
School Education Minister Mr. Anbil Mahesh meeting with the President
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை மணப்பாறையில் நடைபெற உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார்.
'Iron Antiquity' book launch that will change the perspective of Indian history - Foundation laying ceremony for Keezhadi & Gangaikonda Cholapuram Museums & Keezhadi website launching ceremony - Invitation
இந்திய வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' நூல் வெளியீடு - கீழடி & கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் & கீழடி இணையதளம் தொடங்கி வைத்தல் விழா - அழைப்பிதழ்
'Iron Antiquity' book launch that will change the perspective of Indian history - Foundation laying ceremony for Keezhadi & Gangaikonda Cholapuram Museums & Keezhadi website launching ceremony - Invitation
Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு
Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டவுடன், அதனை ஆராய ஒரு குழு அமைத்து விரைவில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 309ல் அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு (Old Pension Scheme) பதிலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
- தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிவிப்பு
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
If it is not possible to take the half-yearly exam in flood-affected areas, the exam will be held in January - Minister Anbil Mahesh interview
வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்ட
If it is not possible to take the half-yearly exam in flood-affected areas, the exam will be held in January - Minister Anbil Mahesh interview
"மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வு நடத்த திட்டம்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும். மற்ற இடங்களில் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி வரும் 9-ம் தேதி முதல் நடைபெறும். 9-ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும்.
அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம். தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ்கள் வைத்திருக்கும் அறைகள் தரை தளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Minister consults with CEOs regarding status and safety arrangements of rain-affected schools
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
Minister consults with CEOs regarding status and safety arrangements of rain-affected schools
Panchayat Union Elementary School whose name was changed in response to people's demand - Minister Anbil Mahesh's action
மக்களின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நடவடிக்கை
Panchayat Union Primary School whose name was changed in response to people's demand - Minister Anbil Mahesh's action
நாமக்கல்: மக்கள் கோரிக்கையை ஏற்று ‘அரிசன் காலனி’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்ற பெயரை ‘மல்லசமுத்திரம் கிழக்கு’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றம் செய்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளையும் குறிப்பிட்டு பெயர் மாற்றம் செய்து வைத்த அமைச்சர்
பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ - நடவடிக்கை எடுத்த அமைச்சர் மகேஷ்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் எனும் பகுதியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பள்ளியின் பெயர், ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ என்று இருந்தது. இதில், ‘அரிசன் காலனி’ என்பதை நீக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்களும், அந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரும் தொடர்ந்து போராடி வந்தனர். இவர்களின் போராட்டத்தை வழக்கறிஞர் அன்பழகன் என்பவர், அரசுக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் எடுத்துச் சென்றார்.
இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின்படி அந்தப் பள்ளியின் பெயரை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.
பெயர் மாற்றத்திற்காக போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை பாராட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
The power of postal vote of Teachers & Government employees - Speech by former minister Dindigul Srinivasan
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் தபால் வாக்கு வலிமை - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் பேச்சு
The power of postal vote of Teachers & Government employees - Speech by former minister Dindigul Srinivasan
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
தஞ்சாவூரில் இன்று அதிமுக களஆய்வு என்பது நடந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவர் ‛தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் உள்ளது. திண்டுக்கல் சட்டசபை தேர்தலில் எனக்கு ஒரு தபால் ஓட்டு கிடைக்கவில்லை . தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா'' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் கிடைப்பது இல்லை என்று விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது; நமக்கு எதிராக இருந்தவர்கள் அரசு அதிகாரிகளும், ஆசிரிய பெருமக்களும். அது தெரியுமா? தெரியாதா?. நமக்கு எதிராக தானே ஓட்டுப்போட்டார்கள். எனக்கு என்ன? நான் இப்போது திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ. 22 ஆயிரம் ஓட்டில் நான் வெற்றி பெற்றதாக கூறினார்கள். சரியென்று கையெழுத்துப்போட நான் உட்கார்ந்து இருந்தேன். கலெக்டர் எல்லோரும் உட்கார்ந்து இருந்தோம்.
அப்போது துணை தாசில்தார் ஓடிவந்தாங்க. அய்யா.. அய்யா தபால் ஓட்டு எண்ணி கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் இருங்க.. கையெழுத்து போடாதீர்கள் என்று சொன்னார். சரி வரட்டும். ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஓட்டு கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். ஆனால் வெற்றி வித்தியாசத்தில் 5 ஆயிரம் ஓட்டு எனக்கு குறைந்து போய்விட்டதாக கூறினார்கள்.
என்னய்யா.. என்று கேட்டேன். அதற்கு எல்லா தபால் ஓட்டுகளும் திமுகவுக்கு போய்விட்டது. இதனால் 17,500 ஓட்டில் நீங்கள் ஜெயித்து உள்ளீர்கள் என்றார்கள். அதையாவது கொடுங்களேன்யப்பா.. நான் ஜெயிச்சிட்டேல்ல என்று கூறி தாய்மார்கள் பிரசவத்தின்போது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைவது மகிழ்ச்சியடைந்தேன்.
இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் என் தொகுதியில் மட்டும் 5 ஆயிரம் ஓட்டு.. தபால் ஓட்டில் எத்தனை ஓட்டு தான்யா எங்களுக்கு வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை என்று கூறினார்கள். எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க.. அட கொலைகார பாவிகளா என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை. தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் தோழர்களே. இதனால் இது விளையாட்டு கிடையாது. அந்த ஓட்டுகளால் தான் நாம் தோற்றோம். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும்'' என்றார்.
Government school teacher murdered - Minister assured that appropriate action will be taken
தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
"உடனடியாக தஞ்சை விரைகிறேன்" - மல்லிப்பட்டினத்தில் ஆசிரியர் ரமணி கொலை செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி..
அரசுப்பள்ளி ஆசிரியை கொலை - உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி
முதலமைச்சர் போனில் விசாரித்தார்; சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
The District Collector and the Headmaster can take a decision on giving holidays to the students during rainy season
மழை காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், தலைமை ஆசிரியரும் முடிவெடுக்கலாம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் பதில்
"மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது"
சென்னையில் 'மகிழ் முற்றம்' என்ற திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
The District Collector and the Headmaster can take a decision on giving holidays to the students during rainy season - Answer by Hon'ble Minister of School Education Mr.Anbil Mahesh
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 / 77 களஆய்வு எனும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடி கள ஆய்வு செய்து புது சரித்திரம் படைத்திட்ட மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்...
Doctors Strike - Minister Engaged in negotiations
மருத்துவர்கள் போராட்டம் - அமைச்சர் பேச்சுவார்த்தை
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை.
புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞர் குற்றச்சாட்டு.
வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து மருத்துவரைக் குத்திய விக்னேஷ்.
"Chief Minister M.K.Stalin is our Headmaster" - Minister Anbil Mahesh
“எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்” - கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு
"Chief Minister M.K.Stalin is our Headmaster" - Minister Anbil Mahesh speech in Coimbatore
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “நான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தாலும், எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதலமைச்சர்தான். அவரை பார்க்கச் செல்லும்போது பரீட்சைக்குச் செல்ல தயாராகும் மாணவர்களை போல்தான் நானும் தயாராகிச் செல்வேன். ஆனாலும், எங்களை விட பல செய்திகளை அவர் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பார்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அங்குள்ள பள்ளியின் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் நாங்கள் இதுவரை உங்களை டி.வி.யில் மட்டுமே பார்த்து இருந்தோம். தற்போது நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை அப்பா என்று அழைத்து கொள்ளலாமா என கேட்டு அப்பா என்று அழைத்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த நாள் மிகவும் நிறைவான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். நான் சொல்கிறேன். ஒவ்வொரு நாளுமே நிறைவான நாள் தான். ஏனென்றால் நம்முடைய தி.மு.க. ஆட்சியே நிறைவான ஆட்சியாக தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் அதை தான் சொல்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். கல்வியில் செய்யும் செலவானது நல்ல சமுதாயம் என்ற வட்டியை தரும். பிள்ளைகள் படித்தால் சமுதாயம் பயன்பெறும். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த வேண்டும். படித்து முடித்து நல்ல நிலையை அடையும் போது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை மறந்து விடாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் பலரை விழுதுகள் என்ற செயலியில் இணைத்துள்ளோம். அதில் 7 லட்சம் பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் பள்ளிக்கு செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
19 thousand teacher vacancies will be filled by 2026 - Minister Anbil Mahesh assured
2026க்குள் 19 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
19 thousand teacher vacancies will be filled by 2026 - Minister Anbil Mahesh assured
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு
G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...
