கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன் - அமைச்சர் ராஜ்மோகன்



எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன் - அமைச்சர் ராஜ்மோகன்


தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன். ஆசிரியர்கள் எச்சரிக்கையாக அல்ல, பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர் என்கிற முறையில் அல்ல, ஒரு சகோதரனாக சொல்கிறேன். சொல்லிவிட்டு வரும் சம்பிரதாய ஆய்வு இனி இருக்காது''


- அமைச்சர் ராஜ்மோகன்




மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் தகவல்



மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் தகவல்


ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.


அரசு பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.


புதிய பேருந்து அட்டை வழங்க அவகாசம் தேவைப்படும் நிலையில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க ஏற்பாடு.


அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.


பள்ளிகள் தொடங்கும் / முடியும் நேரம் வரை அரசு பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க குழுக்கள் நியமனம்.


உரிய நிறுத்தங்களில் நிறுத்தி மாணவ, மாணவியரை ஏற்றி, இறக்க ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுரை - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்


ஏப்ரல் 2ஆம் வாரத்திற்குள் தேர்வுகள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை - அமைச்சர்

 

 ஏப்ரல் 2ஆம் வாரத்திற்குள் தேர்வுகள் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை  - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்


விரைவில் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு 

சட்டமன்றத் தேர்தல் வருவதால் விரைந்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க ஏற்பாடு.

 பொது தேர்வுகள் முடிந்தவுடனே ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தொடங்கும் 

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும் 

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்




தேர்தல் அறிவிப்பால் தேர்வு தேதிகள் மாறுமா? - அமைச்சர் பேட்டி



 தேர்தல் அறிவிப்பால் தேர்வு தேதிகள் மாறுமா? - அமைச்சர் பேட்டி 


தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசிவிட்டுதான் தேதி தேர்வு அறிவித்தோம்;


ஏப்ரல் 6 வரை பள்ளிகள் எங்களிடம்தான் இருக்கும்


 - அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி 





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் "கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார் முதலமைச்சர்

 





ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் "கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார் முதலமைச்சர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு 


ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாடு 


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, ”தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்தியதற்காகவும், பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு மற்றும் குடும்ப ஓய்வூதியம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டதற்காகவும் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு  ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெற்றது.


சென்னை நந்தனத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்புரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "உங்களின் கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டோம்.


#Dravidian_Model

#வெல்வோம்_ஒன்றாக




முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்



முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்


PHYSICAL ACTIVITIES FOR SKILL DEVELOPMENT AMONG SCHOOL CHILDREN USING MACHINE LEARNING TECHNOLOGY என்ற தலைப்பில் ஆய்வினை நிறைவு செய்ததற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட "முனைவர்" பட்ட சான்றிதழை என்னுடைய வாழ்வியலின் வழிகாட்டி - அரசியல் ஆசான் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் காண்பித்து, வாழ்த்துப் பெற்றுக்கொண்டேன்.



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - அமைச்சர் அவர்களின் பதிவு



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் #திராவிடமாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக,



பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்,


பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.


இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.


ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி!


1 முதல் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம்



 1 முதல் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம்


💥 தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் 1 முதல் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


💥நவீன உத்திகளை பயன்படுத்தி கற்றல் - கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாநில வள மையம் (State Resource Centre) உருவாக்கப்பட்டுள்ளது.


💥நவீன உலகில் வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறை கற்றலுக்கு தேவையான பரிந்துரைகளை அளிப்பது, குழந்தைகள் மைய வகுப்பறை கற்றல் உத்திகளை காட்சிப்படுத்துவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது உள்ளிட்டவை இந்த மாநில வள மையத்தின் முதன்மை நோக்கமாகும்.


💥இந்நிலையில், மாணவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை இன்று (ஜன.21) திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவற்றை பார்வையிட்டார்.


💥மாணவர்கள் பல்வேறு வகையான பாடத்திட்டங்களை மகிழ்ச்சியாக கற்க வேண்டும். இதற்காகவே இந்த மாநில வள மையம் திறக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் பயமில்லாமல் பாடம் கற்க உதவும். மேலும், குழந்தைகள் வாழ்க்கை பாடத்தின் மூலம் அனைத்தையும் கற்க வேண்டும் என்பதற்காகவும், AI உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்கள் மூலம் பாடத்தை கற்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


💥இது மட்டுமின்றி, ஆசிரியர்கள் தமிழ் இலக்கியம் சார்ந்து ஆய்வு செய்யவும், அறிவியல் சார்ந்து கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் பிற ஆசிரியர்களுக்கும் சொல்லித் தரும் வகையில் வீடியோ கான்பரன்ஸ் அறை அமைக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி அமைக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான பல்வேறு ஆய்வுகளைப் படிக்கவும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் உதவும் வகையில் அமைத்துள்ளோம்” என்றார்.


💥மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு கல்விக் கொள்கையின் படி, மாநில வள மையத்தில் மாணவர்களுக்கான கல்வி செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் புதிய புத்தகம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ளது போல் வள மையம் அமைக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.



>>> Great Republic Day Sale 2026 Offer...


தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா மறுஆய்வு செய்யப்படும் - உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கோவி.செழியன் அவர்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா மறுஆய்வு செய்யப்படும் - உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கோவி.செழியன் அவர்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி : அமைச்சர் அறிவிப்பு



சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு


நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவிப்பு.


சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெறும் 16வது ஆண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.



சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெறும் 16வது ஆண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தபின் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:-


கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இளம்பெண்களை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீட்க, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்காத முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்தார்.


பல்வேறு நாடுகள் புற்றுநோயை தடுப்பூசி மூலம் குணப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புற்றுநோய் தொடர்பான திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.



புற்றுநோய் தடுப்பூசிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் முடிந்த பின்னர், இந்த திட்டம் அமலுக்கு வரும். தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் தடுப்பூசி போட ரூ.15,000 வரை செலவாகிறது. எனவே, புற்றுநோய் தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களும் செலுத்திக் கொள்ளும் வகையில், இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. விரைவில் இலவச தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும்.


என்று அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறினார். 





Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அதிகாரம் - அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி


 

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அதிகாரம்- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி


 💥 கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


💥அந்தந்த மாவட்டத்தில் பெய்யும் மழை நிலவரத்தை பொறுத்து அவர்களே (மாவட்ட ஆட்சியர்கள்) பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து அறிவிப்பார்கள்.


💥 மழைக்காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் அதனை பின்பற்றி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ்



Car Tyre Jack ஐ எளிமையாக உயர்த்த / இறக்க பயன்படும் Two Way Jack Wrench குறித்த தகவல். தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விலை ரூ.299


Universal Car Jack Ratchet Wrench | 360 Forward and Reverse knob Labor-Saving Design | Scissor Jack Lift Speed Handle Tool | Jack Lug Handle Tool | Tire Wheel Jack Wrench


Amazon வலைதள இணைப்பு : 

https://amzn.to/4qrlPJd

RTE Admission - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 RTE Admission - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ஐ முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரைச் சென்று வாதாடியதன் விளைவாக நமக்குரிய #RTE நிதியை பெற்றுள்ளோம்.


எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவச் சேர்க்கை நடைமுறைகள் தொடங்குகின்றன.


கல்வியை பறிக்க எத்தனை தடைகள் வந்தாலும், நம் #திராவிட_மாடல் அரசு முறியடிக்கும்!

 

"நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை : ஆம்புலன்ஸ் குறித்து ஈபிஎஸ் தவறான மன ஓட்டத்தை உருவாக்கியதால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு " - மா.சுப்பிரமணியன் விமர்சனம்



 "நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை : ஆம்புலன்ஸ் குறித்து ஈபிஎஸ் தவறான மன ஓட்டத்தை உருவாக்கியதால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு " - மா.சுப்பிரமணியன் விமர்சனம்


"ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


"காவல் துறை நிபந்தனைகள் எதனையும் தவெக பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது" எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


இது தொடர்பாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


"கரூர் சம்பவத்தில் தமிழ்நாடே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவராக இருக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி அதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அரசியல் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. பேரிடரிலுமா செய்ய வேண்டும்?


’’முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, காவல்துறை தந்திருக்க வேண்டும்’’ என்கிறார் பழனிசாமி. முந்தைய கூட்டங்களிலிருந்து ஆய்வு செய்த பிறகுதான் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் காவல் துறை போட்டது. உடனே நீதிமன்றத்திற்குச் சென்று தவெகவினர் முறையிட்டார்கள்.


திருச்சி பிரச்சாரத்துக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். த.வெ.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ’’எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும். எத்தனை வாகனங்கள் வர வேண்டும் என்றெல்லாம் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்?’’ எனக் கேள்வி எழுப்பினார். விஜய் பிரசாரத்திற்கு வருபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசு எப்படியெல்லாம் முயன்றது என இதில் இருந்தே பழனிசாமி தெரிந்து கொள்ளலாம்.


நிபந்தனைகள் பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை

இந்த விஷயங்கள் எதையும் அறிந்து கொள்ளாமல் எதிர்க் கட்சித் தலைவர் உளறிக் கொட்டியிருக்கிறார். காவல் துறை நிபந்தனைகள் எதனையும் தவெக பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது.


சாலைகளில் பிரசார வேனில் நடக்கும் கூட்டங்களில் இதுவரை தமிழ்நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்த வரலாறு இல்லை. நடுரோட்டில் பஸ்ஸை நிறுத்தி கூட்டம் நடத்திவிட்டு, அவசரத்திற்கு அவ்வழியே ஆம்புலன்ஸ் வந்தால், அரசாங்கம் இடையூறு செய்கிறது என்று சொல்லி அங்கிருந்த தொண்டர்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான். ’’ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்’’ என பழனிசாமி சொன்ன பிறகுதான் அவருடைய கூட்டங்களில் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர்.


பழனிசாமி போட்ட புதிய அரசியல் எண்ணத்திற்கு ஆட்பட்டுத்தான், தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்தபோது அதை அனுமதிக்க மறுத்து, தாக்குதல் நடத்தினார்கள் தவெக தொண்டர்கள். தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய பழனிசாமியும் தார்மீக பொறுப்பேற்க வேண்டியவர்தான்.


காவல்துறை விதித்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவம் இது. சம்பவம் நடந்த உடனேயே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துரிதமாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டார். அமைச்சர்களை கரூருக்கு அனுப்பினார்; உடனடியாகத் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து நிவாரண உதவிகளையும் விசாரணை ஆணையத்தையும் அமைத்தார். நள்ளிரவிலும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உடன் இருக்கிறார். திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. துபாயிலிருந்து துணை முதல்வர் உதயநிதி அவசரமாகத் தமிழ்நாடு திரும்புகிறார்.


தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பழனிசாமியை போல் இல்லாமல், உடனே களத்தில் இறங்கிச் செயல்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், பழனிசாமியோ சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் முதலமைச்சர் மீதும் காவல்துறை மீதும் பழி போடுகிறார்.


அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. நகருக்கு வெளியே பிரசாரத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை கேட்டுக் கொண்டால், முடியாது நாங்கள் கூட்டத்தைக் காட்டுவதற்கு முட்டுச் சந்துதான் தேவை என்று அப்பாவி பொதுமக்களை அலைக்கழிப்பதுதான் பழனிசாமி போன்றவர்களின் கேவலமான அரசியலாக இருக்கிறது.


தவெக கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு காவல்துறையால் வழங்கப்பட்டது. அதனை தவெக தலைவர் விஜய்யே பிரசாரத்தில் ஒப்புக்கொண்டு பேசும் காட்சியை எல்லாம், வழக்கம் போலவே டிவியில் பார்க்கும் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா?


ஆளுங்கட்சியின் மீது பழி போடவும் அரசியல் செய்யவும் எந்தக் காரணமும் இல்லை என்றால் மக்களுடன் நின்று மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலைச் செய்யுங்கள். அதை விடுத்து இதுபோன்ற மோசமான நாடகங்களை அரங்கேற்றி அவற்றுக்கு ஆளுங்கட்சியின் மீது பழி போட்டு அரசியல் செய்வது மனசாட்சியே கிஞ்சித்தும் இல்லாதவர்கள் செய்யும் செயல். மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல. அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுவது தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராதது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனைக் கதைகளையும் பரப்பித் தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம்." என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஆட்சியின் வெற்றிக்கு நீ ஒரு ஆள் போதும்டா - இரண்டாம் வகுப்பு குழந்தையின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 


ஆட்சியின் வெற்றிக்கு நீ ஒரு ஆள் போதும்டா - இரண்டாம் வகுப்பு குழந்தையின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் 



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




SLAS அறிக்கை : 38வது ஆய்வுக்கூட்டம் தென்காசியில் நடைபெற்றது தொடர்பான அமைச்சர் அவர்களின் பதிவு

 


SLAS அறிக்கை : 38வது ஆய்வுக்கூட்டம் தென்காசியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம், ஜூன் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் எனது தலைமையில் நடைபெற்றது. அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களோடு ஆலோசித்தோம். அதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களைச் சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். 


அதன்படி, முதல் ஆய்வுக்கூட்டம் ஜூன் 25ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் தொடங்கியது. பிற அலுவல்களுக்கு இடையிலும், தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திய நிலையில், 38வது மாவட்ட ஆய்வுக் கூட்டம் தென்காசியில் இன்று நடைபெற்றது. 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 700 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். SLAS தரவுகளை முன்வைத்தும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினோம்.


SLAS அறிக்கை : 37வது ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது தொடர்பான அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை : 37வது ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 37வது மாவட்டமாக தேனியில் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நிறைவுற்றது.


மாணவச் செல்வங்களின் கற்றல் அடைவு குறித்து SLAS அடிப்படையில் கலந்துரையாடி, தேவையான முன்னேற்றங்கள் பற்றி ஆலோசித்தோம்.


அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் முடிந்த பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அளித்த பேட்டி


 கீழக்கரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில்  நடைபெற்ற அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் முடிந்த பின் அவர் அளித்த பேட்டி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




எல்லா ஆசிரியர்களுக்கும் சொல்லிக்கொள்வது ஒன்னே ஒன்னு தான் TET சார்ந்து ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அதை நாங்க பாத்துக்குறோம். ஆசிரியர் தகுதித் தேர்வால் ஒரு ஆசிரியர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள எங்கள் பிள்ளைகளை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வதைப்போல ஆசிரியர்களைப் பாதுகாப்பது தமிழ்நாடு அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.


மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 

👆




கோளரங்க வளாகத்தில் "வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்" திறப்பு

 கோளரங்க வளாகத்தில் "வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்"  திறப்பு


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் மையம் - கோளரங்க வளாகத்தில் "வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்" அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேரில் பார்வையிட்டோம்



SLAS அறிக்கை : 34வது ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

SLAS அறிக்கை : 34வது ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS2025 அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம், 34வது மாவட்டமாக சிவகங்கையில் இன்று நடைபெற்றது. இதில் 3 கல்வி ஒன்றியங்களில் இருந்து 340 தலைமையாசிரியர்கள் பங்கேற்றார்கள். 


மாணவச் செல்வங்களை கற்றல் அடைவுகளை எட்டச் செய்வது, ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம்.


@tnschoolsedu




SLAS அறிக்கை : 35வது ஆய்வுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

 

SLAS அறிக்கை : 35வது ஆய்வுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 800 பள்ளித் தலைமையாசிரியர்களுடன் சந்திப்பு.


SLAS2025 ஆய்வறிக்கை அடிப்படையிலான 35வது மாவட்ட ஆய்வுக் கூட்டமாக அமைந்தது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

16-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 Tamil SESSION 2 - Youtube Links

  16-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 Tamil SESSION 2 - Youtube Links Good afternoon, all. Kindly note today's session and its...