கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்களாக பணிபுரிந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் 9 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...

 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை - 2011 முதல் 2020 வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்களாகப் பொறுப்பு வகித்த IAS அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை...



ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதனடிப்படையில், மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்துள்ளது.  2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.


>>> தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பரிந்துரை ஆணை- தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Age Relaxation Format

 மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம் Application form for requesting age relaxation for students >>> தரவிறக்கம் செய்ய இங்கே ச...