நிவாரணத்துக்கு ஒருநாள் சம்பளம் - ஆசிரியரின் ஆதங்க கடிதம் வைரல் - நாளிதழ் செய்தி (One day's salary for relief - Teacher's letter goes viral - daily news)...
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சங்கத் தலைமைகளின் கவனத்திற்கு...
எனக்கு வரவேண்டிய
1.EL
2.Incentive
3.CPS--->GPF
4.ஊதிய முரண் தீர்வு
5.DA arrear
6.21 மாத நிலுவைத் தொகை......
இன்னும் நிறைய இருக்கு. இதையெல்லாம் பெற்று தராத நீங்கள் என்னுடைய சம்மதம் இல்லாமல் என்னுடைய ஊதியத்தை பிடித்துக் கொள்ள அரசுக்கு பச்சைக்கொடி காட்ட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அரசிடம் நெருக்கம் காட்ட எங்களை பலி கொடுத்து விடாதீர்கள்.
போதும் கொடுத்ததெல்லாம் போதும். திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து ஒரு வழி பாதையாகவே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். திமுக அரசிடமிருந்து இதுவரை எதையும் பெற்றது கிடையாது.
எதிரியாக நின்று அடித்தால் வலிக்கும் ஆனால் நண்பனாக இருந்து அடித்தால் வலிக்காது அல்லது வலிக்காதது போல் நடித்தாக வேண்டும். இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலைமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.