கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Authorization Order for 6 months for 750 teaching posts in upgraded schools in the academic year 2017-2018 - Government Secretary's letter, dated : 28-11-2024

 

2017-2018-ஆம்‌ கல்வி ஆண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 750 ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு ஊதியம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்‌ - அரசுச்‌ செயலாளர்‌ கடிதம், நாள் : 28-11-2024


Issue of Pay Authorization for 6 months for 750 teaching posts in upgraded schools in the academic year 2017-2018 - Government Secretary's letter, dated : 28-11-2024


பள்ளிக் கல்வித் துறை, 

தலைமைச் செயலகம்,

சென்னை - 600006


கடித எண் (efile ) : 10976 / ப.க.5 (1)/ 2024-1, நாள் : 28-11-2024


 01-11-2024 முதல் 30-04-2025 வரை ஆறு மாதங்களுக்கு சம்பளம்‌ வழங்கும்‌ அதிகாரம்‌.


அனுப்புநர்‌

திருமதி. சோ.மதுமதி, இ.ஆ.ப.,

அரசுச்‌ செயலாளர்‌.


பெறுநர்‌

அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள்‌ /சார்‌ கருவூல அலுவலர்கள்‌.

சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌, சென்னை-01 / 08 / 35.

சம்பந்தப்பட்ட சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌.


ஐயா,

பொருள்‌: பள்ளிக்கல்வி - 2017-2018-ஆம்‌ கல்வி ஆண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட 150 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 01.08.2021 முதல்‌ 31.07.2024 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்கப்பட்டது - அதனை தொடர்ந்து 01.08.2024 முதல்‌ 31.10.2024 வரை பள்ளிக்‌ கல்வி இயக்குநரால்‌ விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது - தற்போது 01.11.2024 முதல்‌ 30.04.2025 வரை மேலும்‌ ஆறு மாதங்களுக்கு ஊதியம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌.174, பள்ளிக்கல்வித்‌ [அ௧இ 1] துறை, நாள்‌. 18.07.2017.

2. அரசாணை (1டி) எண்‌. 39, பள்ளிக்கல்வித்‌1பக5(1)]துறை, நாள்‌. 23.02.2022.

3. பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறை ந.க. எண்‌. 31574 /எல்‌/இ3/2021, நாள்‌. 01.08.2024.

4. பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌.31574/எல்‌ 7/இ3/2021, நாள்‌.14.11.2024.


பார்வை 1-இல்‌ காணும்‌ அரசாணைகளில்‌ 2017 - 2018-ஆம்‌ கல்வியாண்டில்‌ 150 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப்‌ பள்ளிகளை உயர்நிலைப்‌ பள்ளிகளாக தரம்‌  உயர்த்தப்பட்டு அவ்வாறு தரம்‌ உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு தலா ஒரு உயர்நிலைப்‌ பள்ளிக்கு 5 பட்டதாரி பணியிடங்கள்‌ வீதம்‌ 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவித்தும்‌ 150 உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களை உயர்நிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வழங்கப்பட்டது. பார்வை 2-இல்‌ காணும்‌ அரசாணையில்‌, பார்வை 1-இல்‌ காணும்‌ அரசாணையில்‌ தோற்றுவிக்கப்பட்ட 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு 01.08.2021 முதல்‌ 31.07.2024 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.08.2024 முதல்‌ 31.10.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில்‌, 01.11.2024 முதல்‌ 30.04.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக்‌ கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பார்வை 4-இல்‌ காணும்‌ கடிதத்தில்‌ பள்ளிக்கல்வி இயக்குநர்‌ கடிதத்தில்‌ அரசை கேட்டுக்கொண்டுள்ளார்‌.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அரசாணை வெளியீடு

  ஆசிரியர்கள் வகுப்பறை பயன்பாட்டிற்காக கைப்பிரதிப் (Hand Copy) பாட நூல்கள் வழங்க அனுமதியளித்து அரசாணை (நிலை) எண்: 109, நாள் : 12-05-2025 வெள...