கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு



 பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு


சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து மொத்தமாக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.


இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு

அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்...