இடுகைகள்

மனதின் குரல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்களின் பேச்சு (Digital Money Transfer - Prime Minister Modi's speech on the Maan ki Baat)...

படம்
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்களின் பேச்சு (Digital Money Transfer - Prime Minister Modi's speech on the Maan ki Baat)... பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோர் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். மார்ச் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. நாள்தோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. இதனால் பணத்தை எடுத்துச் செல்லவோ அல்லது ஏடிஎம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை. ஒரு நாள் முழுவதும் கையில் காசு எடுத்துச் செல்லாமல் டிஜிட்டல் ப

தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையை பாராட்டிய பிரதமர் மோடி!

படம்
  தமிழகத்தை சேர்ந்த ஆசிரியையை மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி! தமிழகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை என்.கே.ஹேமலதா பற்றி அறிந்தேன். விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் பழமையான தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறார். கரோனா வைரஸ் காலத்தில்கூட தனது கற்பிக்கும் திறனில் தடைகள் ஏற்படாமல் வித்தியாசமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தியுள்ளார். சவால்கள் நிச்சயம் நமக்கு இருக்கும். அதை நாம் புத்தாக்கமான வழியில் எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியை ஹேமலதா பாடத்தின் 53 பிரிவுகளையும், விலங்குகளைக் கொண்ட வீடியோவாக மாற்றி, அதே பென் டிரைவில் பதிவேற்றம் செய்து, மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளது. பாடங்களை வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களையும் தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்குத் தீர்த்து வைத்துள்ளார். இதுபோன்ற கல்வி, மாணவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது. ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை மத்திய அரசின் தீக்ஸா தளத்தில் பதிவேற்றம் செய்தால் தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்கள் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும்'

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...