1988ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை...
1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை... 1988..ல்... அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டீ (Confederation ) பேரமைப்பு சார்பாக 22-06-1988 முதல் 23-07-1988 வரை 31 நாட்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது. 40 ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாநில அளவிலான தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேலை நிறுத்தத்தின் உச்சகட்டமாக சென்னை முற்றுகை அறிவிக்கப்பட்டது. வேன் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலேயே கைது செய்யப்பட்டு மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர். காவல்துறையின் தடையை மீறி சென்னை எழும்பூர் சென்டரல், பாரிமுனைக்கு அரசு ஊழியர் ஆசிரியர்கள் வந்தனர். வேஷ்டி உடுத்தியவர்கள் ஆசிரியர்கள் பேன்ட் சட்டை போட்டவர்கள் அரசு ஊழியர்கள் என சந்தேகப்பட்டவர்களை எல்லாம் காவல்துறை கைது செய்தது. ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும் காவல்துறை கைது செய்கிறது... எனவே, கூட்டமாக செல்லாதீர்கள் ... பேனர் பிடிக்காதீர்கள்., கொடி பிடிக்காதீர்கள்.., கோசம்