கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்


Part-time Teachers' strike called off


பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்


17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர், பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்.


பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்க அறிக்கை



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


Interview of School Education Minister on the protest of SG Teachers

 

 

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பேட்டி


Interview with School Education Minister Mr. Anbil Mahesh on the protest of Secondary Grade Teachers



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த Bluetooth Headphones...



திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 

 

திட்டமிட்டபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - ஜாக்டோ ஜியோ 


 தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் வராததால் அறிவிப்பு


கடுமையான நிதி நெருக்கடியில் இந்த அரசு இயங்கிக் கொண்டு வருகிறது. உங்களின் அனைத்து கோரிக்கைகளும் முதல்வர் இடத்தில் கொண்டு செல்கிறோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.



>>> JACTTO GEO அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



NIVEA Soft Light Moisturizer, 300 ml | Instant Hydration with Vitamin E & Jojoba Oil | Non-Greasy Cream for Face, Body and Hands | For Smooth, Healthy Skin


https://amzn.to/4s5pHQV




அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பா.ம.க. தார்மீக ஆதரவு


 அரசு ஊழியர்களின் காலவரையற்ற  வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பா.ம.க. தார்மீக ஆதரவு - அன்புமணி ராமதாஸ் 


பேச்சு என்ற பெயரில் அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு: துரோகத்திற்கு பரிசு படுதோல்வி தான்


பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவுக்கும்,  அரசு ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே  சென்னை தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்துள்ளன. அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால் ஏற்கனவே அறிவித்தவாறு  ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. இப்படி ஒரு நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டு மக்களின் நலனிலும், அரசு ஊழியர் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் இந்த சிக்கலுக்கு எப்போதோ  தீர்வு கண்டிருக்க முடியும். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை கடந்த அக்டோபர் மாதமே அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்தன. அப்போதே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை.


அதன்பின்னர், நவம்பர் 18 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டன.  வரும் 27-ஆம் நாள் வேலைநிறுத்த மாநாடு நடத்தப்படவுள்ளது. கடந்த மாதமும், நடப்பு மாதமும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய போது, அவர்களை ஒடுக்கி பணிய வைக்கலாம் என்று நினைத்த திமுக அரசு, அது முடியாத நிலையில் தான் இப்போது பேச்சு நடத்த அழைத்தது.


சென்னையில் நடந்த பேச்சுகளில் எந்த வாக்குறுதியையும் அரசு அளிக்கவில்லை. பேச்சுகளின் விவரத்தை முதலமைச்சரிடம் தெரிவித்து, அரசின் முடிவை  பொங்கலுக்குள் தெரிவிப்பதாக அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும்.  ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதை கைவிடச் செய்வதற்காகவே  பொங்கலுக்குள் முடிவை தெரிவிப்பதாக அரசு கூறியுள்ளது.  திமுக அரசின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்ள விரும்பாத அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்  நடைபெறும் என அறிவித்துள்ளனர்.


2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்  தொடர்பாக 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிய திமுக அரசு, மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட  இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது.


கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம்  அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை  ஏமாற்றும் வகையில் கடந்த 24.02.2025-ஆம் நாள்  4 அமைச்சர்கள் கொண்ட குழு பேச்சு நடத்தியது. அப்போதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறிய அரசு  ஊழியர்கள், அதன் 10 மாதங்களாக  அரசு ஊழியர்களை  திரும்பிக் கூட பார்க்கவில்லை.  அரசு ஊழியர்கள் மீண்டும், போராட்டம் அறிவித்ததால் தான்  அவர்களை ஏமாற்றும் வகையில் மீண்டும் பேச்சு நடத்தி ஏமாற்றியுள்ளது.


அரசு வாங்கிய கடனுக்கு ஆண்டுக்கு ரூ.70,503 கோடி வட்டி கட்ட வேண்டியிருப்பதால் தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று  இன்றைய பேச்சுகளின் போது அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். அரசின் கடனும், வட்டியும் அதிகரித்ததற்கு காரணம் திமுக ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும் தான். அதற்கான தண்டனையை அவர்கள் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர, அரசு  ஊழியர்களுக்கு தண்டனை அளிக்கக் கூடாது.


அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. காலவரையற்ற  போராட்டத்தால் அரசின் சேவைகளும், மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்றாலும், வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதமாக அரசு ஊழியர்கள் அதை கையில் எடுத்திருப்பதால் அதற்கும் பா.ம.க. தார்மீக ஆதரவளிக்கிறது.  அரசு ஊழியர்களுக்கு திமுக செய்த தொடர் துரோகங்களுக்கான பரிசு வரும் தேர்தலில் கிடைக்கும் படுதோல்வி தான். புதிய அரசு அமைந்த பின் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதை  பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.




NIVEA Soft Light Moisturizer, 300 ml | Instant Hydration with Vitamin E & Jojoba Oil | Non-Greasy Cream for Face, Body and Hands | For Smooth, Healthy Skin


https://amzn.to/4s5pHQV




ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை - மாவட்டக் கல்வி அலுவலர் உறுதி





ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை பின்பற்றப்படும் - மாவட்டக் கல்வி அலுவலர் உறுதி


நாமக்கல் மாவட்டம் டிட்டோஜாக் அமைப்பினருடன் 17.12.2025  அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கீழ்க்கண்ட கோரிக்கைகள்  ஏற்றுக்கொள்ளப்பட்டன


1. தொடக்கக் கல்வியில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலரால் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் அலுவலரின் செயல்முறைகள்  மற்றும் கையொப்பம் இல்லாமல் தலைமை ஆசிரியர்களின் WhatsApp குழுவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக அனுப்பியது  விலக்கிக்  கொள்ளப்படுகிறது.


2. தொடக்கப் பள்ளி  ஆசிரியர்கள் தேர்வு நேரங்களில் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொ.க.) அனுமதியுடன் விடுப்பு எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது


3. தேர்வுகள் உரிய நேரத்தில் நடக்கவில்லை என்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட  விளக்க  கடிதங்கள் ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுகிறது. 


4. தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் சார்பாக காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்ட கடிதம் திரும்ப பெறப்பட்டது.


5.  ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை பின்பற்றப்படும்


மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி) நாமக்கல்


Sweatshirts for Men | Unisex Hoodie | Hoodie |Available in Plus Size 


https://amzn.to/4oYLwPn




TETOJAC மாநில உயர்மட்டக்குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு

 

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு


டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் இன்று 08-12-2025 சென்னையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது. 


ஆசிரியர்கள் கைது

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் சென்னை எழும்பூரில் காத்திருப்பு போராட்டம் நடத்தியோர் கைது



இந்த போராட்டத்தின்  தொடர்ச்சியாக காவல்துறையின் ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக்  மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்தனர். 


அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஏற்கனவே கடந்த 12.08.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர். 


அது தொடர்பாக அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பும் அவரிடம் வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நான்கு கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆணைகள் விரைவில்  வெளியிடப்படும் என்று அமைச்சர் அவர்கள்  கூறிய விவரங்களும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. 


இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட  மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக  இன்றே உத்தரவுகள் வெளியிடுவதற்குரிய வாய்ப்பு இல்லை என்றாலும்,  இந்த நிமிடம் முதல் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நான் விரைவுபடுத்துகிறேன். 


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களோடு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்கள் .அந்த அடிப்படையில் அவருடைய பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது 


  அதன்பின்பு தலைமைச் செயலக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில்

 இன்று நடைபெற்ற ஒரு நாள் காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள சூழலில், இந்த போராட்டத்தை சென்னையில் தொடர்ந்து நடத்துவதை விட இந்த போராட்டத்தை ஒரு விரிவடைந்த போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .


அதன் அடிப்படையில் வருகிற 12/12/2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது


இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான டிட்டோஜாக் கூட்டங்களை 10-12-2025 அன்று நடத்த வேண்டும் என முடிவாற்றப்பட்டது


 அதன்பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு மீண்டும் கூடி அறிவிக்கும் 


டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள்



Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women


https://amzn.to/44fLDid




அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம் - 70 லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம்



அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம் - 70 லட்சம் மக்கள் வீதிகளில்  இறங்கி முழக்கம்


*அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்


* நியூயார்க்கில் 'No Kings' என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்.


* சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம்


* குடியேற்றவாசிகளுக்கு எதிராக அடக்குமுறைகள்,அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணி நீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

 

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு




மறியல் போராட்டத்திற்கு வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் / அலுவலர்கள் சங்கம் முழு ஆதரவு



அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் : அதிகாரிகள் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து தலைமைச் செயலகம் வந்த ஊழியர்கள்



அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் : அதிகாரிகள் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து தலைமைச் செயலகம் வந்த ஊழியர்கள்



Pension scheme for government employees: Employees wear black armbands to protest against interim report submitted by committee of officials



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



இன்று (11-09-2025) Leave எடுக்க கட்டுப்பாடு - தலைமைச் செயலாளர் உத்தரவு




இன்று (11-09-2025) விடுப்பு எடுக்க கட்டுப்பாடு - தலைமைச் செயலாளர் உத்தரவு


One day Mass Casual Leave on 11.09.2025 ( Thursday ) by certain associations Participation of State Government Employees / Teachers - Instructions - Issued .



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TETOJAC கோட்டை முற்றுகைப் போராட்டம் Notice

 


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோட்டை முற்றுகைப் போராட்டம் கோரிக்கைகள் நோட்டீஸ்


Tamilnadu Elementary school Teachers' Organizations Joint Action Committee Fort Siege Protest Demands Notice



TETOJAC கோட்டை முற்றுகைப் போராட்டம் Notice 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


 இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 

ஜூலை 19ல் ஒரு நாள் உண்ணாவிரதம். 

ஆகஸ்ட் 2,9,23,30 தேதிகளில் 4 மண்டலங்களில் போராட்ட ஆயத்த கூட்டம்,  

செப்டம்பர் மாத இறுதியில் சிறை நிரப்பும்  போராட்டம் 

நடத்த திருச்சியில் நடந்த பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.





25-06-2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்



 25-06-2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் - வருவாய்த்துறை சங்கத்தினர் முடிவு


Revenue Department Association decides to hold Casual Leave Protest on 25-06-2025


அவிநாசி தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க மாநில தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும்போது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.



அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - அமைச்சர்



அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை 


மே முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கீதாஜீவன்


போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கை


போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்


அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.


மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


கோடையில் இருந்து குழந்தைகளைக் காக்க மே 11 முதல் 25 ஆம் தேதி வரை அங்கன்வாடிக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த மாவட்ட அலுவலகங்கள் முன்பாக  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2, 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது.


மே 2-ம் தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 


அரசாணை (ப) எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25 ஆம் நாள் முடிய 15 நாள்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். 


உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறை, பண்டிகை நாள்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாள்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது.


ஆனால் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022 ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. 


மேலும், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாள்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது. குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR - (TAKE HOME RATION) - ஆக வழங்கப்பட்டு வருகிறது.  


பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


▪️ அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு எதிராக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது


▪️ அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்


▪️ இரு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்





Casual Leave agitation on same date - Tamil Nadu Government Employees Association call

 ஒரே தேதியில் தற்செயல் விடுப்பு போராட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அழைப்பு


Contingent Leave agitation on same date - Tamil Nadu Government Employees Association call




Arrest of part-time teachers who protested insist on permanent job



 பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது


Arrest of part-time teachers who protested insist on permanent job


சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


2,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து வரும் போலீசார்


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில் கைது


தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.


அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அவர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பின்னர் ரூ.7500 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு பேல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேலும் ஊதியம் உயர்த்தி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்தது. மேலும் ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.


இந்நிலையில், நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே குவிந்தனர். பின்னர் கோட்டை நோக்கி முற்றுகையில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் ஏமாற்றம் கிடைத்தது.


இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளோம். எங்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். மேலும் முதலில் எங்களுக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



At the Block education office, the teachers are on a sit-in


வட்டாரக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


At the Block education office, the teachers are on a sit-in


 கோவை: மதுகரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி அலுவலர் நேசமணியை கண்டித்து மதுக்கரை வட்டார ஆசிரியர்கள் நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டம்


மதுக்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி பலன்தொகையை, கடந்த ஓராண்டாக பெற்றுத் தராத வட்டார கல்வி அலுவலரை, கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் துவங்கிய இந்த போராட்டம் இரவு ஆகியும் ஆசிரியர்கள் கலைந்து செல்லாமல் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்