கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


 இடைநிலை ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு


சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 

ஜூலை 19ல் ஒரு நாள் உண்ணாவிரதம். 

ஆகஸ்ட் 2,9,23,30 தேதிகளில் 4 மண்டலங்களில் போராட்ட ஆயத்த கூட்டம்,  

செப்டம்பர் மாத இறுதியில் சிறை நிரப்பும்  போராட்டம் 

நடத்த திருச்சியில் நடந்த பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.





25-06-2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்



 25-06-2025 அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் - வருவாய்த்துறை சங்கத்தினர் முடிவு


Revenue Department Association decides to hold Casual Leave Protest on 25-06-2025


அவிநாசி தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க மாநில தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும்போது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.



அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - அமைச்சர்



அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை 


மே முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கீதாஜீவன்


போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கை


போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்


அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.


மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


கோடையில் இருந்து குழந்தைகளைக் காக்க மே 11 முதல் 25 ஆம் தேதி வரை அங்கன்வாடிக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த மாவட்ட அலுவலகங்கள் முன்பாக  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பாக மே 2, 2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இதனால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக்கூடியதாக உள்ளதென்பது மிகவும் வருந்தத்தக்கது.


மே 2-ம் தேதி எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது, மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மையப் பயணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 


அரசாணை (ப) எண்.117, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை நாள்: 30.04.2025-ன்படி குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி மையங்கள்) மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் முதல் 25 ஆம் நாள் முடிய 15 நாள்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும். 


உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறை, பண்டிகை நாள்களுக்கான விடுமுறை , உள்ளுர் விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளையும் கணக்கிட்டு, 300 நாள்கள் கண்டிப்பாக மைய செயல்பாடுகளும் அதன் மூலம் முன் பருவ பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதும் உறுதி செய்யப்பட்டு வந்தது.


ஆனால் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இவ்வரசு 2022 ஆம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. 


மேலும், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாள்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது. குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையில் THR - (TAKE HOME RATION) - ஆக வழங்கப்பட்டு வருகிறது.  


பதவி உயர்வு, பணி மாறுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பணியாளர் நலன் தொடர்பாக பணியாளர் சங்கங்களால் அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


▪️ அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு எதிராக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது


▪️ அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்


▪️ இரு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்





Casual Leave agitation on same date - Tamil Nadu Government Employees Association call

 ஒரே தேதியில் தற்செயல் விடுப்பு போராட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அழைப்பு


Contingent Leave agitation on same date - Tamil Nadu Government Employees Association call




Arrest of part-time teachers who protested insist on permanent job



 பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது


Arrest of part-time teachers who protested insist on permanent job


சென்னை எழும்பூரில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


2,000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து வரும் போலீசார்


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்


கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில் கைது


தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர்.


அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அவர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பின்னர் ரூ.7500 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்டு பேல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேலும் ஊதியம் உயர்த்தி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்தது. மேலும் ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.


இந்நிலையில், நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே குவிந்தனர். பின்னர் கோட்டை நோக்கி முற்றுகையில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் ஏமாற்றம் கிடைத்தது.


இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளோம். எங்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். மேலும் முதலில் எங்களுக்கு செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



At the Block education office, the teachers are on a sit-in


வட்டாரக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


At the Block education office, the teachers are on a sit-in


 கோவை: மதுகரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில், வட்டார கல்வி அலுவலர் நேசமணியை கண்டித்து மதுக்கரை வட்டார ஆசிரியர்கள் நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டம்


மதுக்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி பலன்தொகையை, கடந்த ஓராண்டாக பெற்றுத் தராத வட்டார கல்வி அலுவலரை, கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் துவங்கிய இந்த போராட்டம் இரவு ஆகியும் ஆசிரியர்கள் கலைந்து செல்லாமல் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.



தொடக்கக்கல்வி இயக்குநருடன் 06.09.2024 இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிட்டோஜாக் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு...

 

அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு -   தொடக்கக்கல்வி இயக்குநருடன் 06.09.2024 இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிட்டோஜாக் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு...




Notification of token strike and fort blockade - TETOJAC State Bearers are invited to attend a consultative meeting to be held on 06.09.2024 today at 11 am with the Director of Elementary Education...





போராடச் சென்ற ஆசிரியர்கள் மீது வழக்கு - ஆசிரியர் கூட்டணி கண்டனம்...

 


போராடச் சென்ற ஆசிரியர்கள் மீது வழக்கு - ஆசிரியர் கூட்டணி கண்டனம்...




போராடப் புறப்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்கு - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்...



அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டி 03-07-2024 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் போராட்டம் குறித்த செய்தித் தொகுப்பு...

 

அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டி 03-07-2024 அன்று நடைபெற்ற TETOJAC மறியல் போராட்டம் குறித்த செய்தித் தொகுப்பு...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



ஒருமையில் பேசிய மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்...


 ஒருமையில் பேசிய மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் (நாளிதழ் செய்தி)...



1988ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை...

1988...ல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்.! - ஓர் பார்வை...


1988..ல்...  

அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டீ  (Confederation ) பேரமைப்பு சார்பாக


22-06-1988 முதல் 23-07-1988 வரை


31 நாட்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்றது.


40 ஆயிரம் பெண் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மாநில அளவிலான தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


வேலை நிறுத்தத்தின் உச்சகட்டமாக சென்னை முற்றுகை அறிவிக்கப்பட்டது.


வேன் மற்றும் பேருந்தில் வந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்திலேயே கைது செய்யப்பட்டு மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டனர்.


காவல்துறையின் தடையை மீறி சென்னை எழும்பூர் சென்டரல், பாரிமுனைக்கு அரசு ஊழியர்  ஆசிரியர்கள் வந்தனர்.


வேஷ்டி உடுத்தியவர்கள் ஆசிரியர்கள் பேன்ட் சட்டை போட்டவர்கள் அரசு ஊழியர்கள் என சந்தேகப்பட்டவர்களை எல்லாம் காவல்துறை கைது செய்தது.


ரயில் நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும்


காவல்துறை கைது செய்கிறது...


எனவே, கூட்டமாக செல்லாதீர்கள் ...


பேனர் பிடிக்காதீர்கள்.,


கொடி பிடிக்காதீர்கள்..,


கோசம் போடாதீர்கள்


என தோழமைச் சங்க தலைவர்கள் ரகசியமாக தகவல்களை பகிர்ந்து சென்றனர்.


காவல் துறையின் அனைத்து தடைகளையும் மீறி சென்னை அண்ணா சாலையில் 22 -7 - 1988 அன்று 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


தலைவர் யார் ? தொண்டர் யார்? என்று யாருக்கும் தெரியாது.


போராட்ட கோசங்கள் மட்டுமே அனைவரையும் இணைத்தது.


யாரும் கலைந்து செல்லவில்லை.


கைது செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.


போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முடியாததால் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது.


ஆசிரியர் சங்க தலைவர் வீரையன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டதால்


மண்டை உடைந்து ரத்தம் ஆறாக ஓடியது.


போராட்ட வீரர்களை கலைக்க  காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசியது.


கண்ணீர் புகை குண்டு


ஈரத் துண்டால் பிடிக்கப்பட்டு காவல்துறை மீது திருப்பி வீசப்பட்டது.


குதிரைப் படை வீரர்கள் மூலம் போராட்டக்காரர்களை கலைக்க  முயற்சி செய்தனர்.


குதிரைப் படை தாக்குதலை எதிர்கொண்டு குதிரைப் படை திருப்பி குதிரை லாயத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது.


கூட்டத்தை கலைக்க முடியாமல் தோல்வி கண்ட அன்றைய ஆளுநர் அரசு சென்னை சிறையில் இருந்து மாநிலத் தலைவர்களை கோட்டைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமரச தீர்வை உருவாக்கியது.


பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதால்...


முற்றுகையை கைவிட்டு கலைந்து நேரு ஸ்டேடியம் செல்லுமாறு காவல்துறை முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் அறிவித்தது.


காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது..,


எங்கள் சங்க தலைவர்கள் நேரில் வந்து சொன்னால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அறிவித்தனர்.


வேறு வழியில்லாமல் காவல்துறையினர் தோழர். M.R.அப்பன் அவர்களை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர்.


காவல்துறை வாகனத்தின் மேலே ஏறி நின்று காவல்துறை ஒலிபெருக்கியில் M.R. அப்பன் அவர்கள் முற்றுகையில்  ஈடுபட்டபவர்களிடம் பேசினார்.


பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது...,


அனைவரும் நேரு ஸ்டேடியம் வாருங்கள் பேசுவோம் என்று அறிவித்தார்.


M.R. அப்பன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முற்றுகையை கைவிட்டு நடை பயணமாக நேரு ஸ்டேடியம் சென்றனர்.


அரசு செலவில் நேரு ஸ்டேடியத்தில் பேச்சுவார்த்தை ஒப்பந்த விளக்க கூட்டம் நடைபெற்றது.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கொள்கை அளவில் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது...


அதனால் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறோம் என்று மாநிலத் தலைமை அறிவித்தது.


வேலைநிறுத்தத்தின் விளைவாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றோம்.


அனுபவமே நல்ல ஆசான்





இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்(Secondary Grade Teachers call off agitations)...

 


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்(Secondary Grade Teachers call off agitations)...


பள்ளி மாணவர்கள் நலன்கருதி தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவு


போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழு அறிவிப்பு


*ஏற்கனவே மூன்று மாதத்தில் அறிக்கை பெறப்படும் என அமைச்சர் கூறியிருந்த நிலையில் தற்போது மூன்று மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவிப்பு..









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் போராட்டகாலத்திற்கு ஊதியம் வழங்கப்பட்ட விவரம் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Details of Salary Disbursements for Nutrition Workers Strike Period 2016, 2017 & 2019 - Social Welfare Commissioner's Letter, Dated: 30-06-2023)...



>>> 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் போராட்டகாலத்திற்கு ஊதியம் வழங்கப்பட்ட விவரம் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Details of Salary Disbursements for Nutrition Workers Strike Period 2016, 2017 & 2019 - Social Welfare Commissioner's Letter, Dated: 30-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் (Part-time special teachers' protest, which had been going on for 3 days, was called off)...

பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர், முதல்வரின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிர்வாகிகள் அறிவிப்பு...




வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...

 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநாட்களாகக் கருதப்படும்...


பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்படுவர்...


ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும்...


- முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...






முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு


ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.



அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்


2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்


ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்


அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்


புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்.


சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்.


அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்.


வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.


அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்.


முதலமைச்சரின் 110 விதியின் 14 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தைக்கு அமைச்சர் பாராட்டு

 Water Bell திட்டத்தைப் பற்றி Cuteஆ சொல்லிட்டாங்க 😍😍 - பள்ளிக் குழந்தையின் பதிலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பாராட்டுப் பதிவு    ...