இடுகைகள்

வெங்கடேசன் எம்.பி. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

🍁🍁🍁 குணபாடம்... -சு.வெங்கடேசன் எம்.பி (கோவிட் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பதிவு)

படம்
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டேன். 22ஆம் தேதி கோவிட் சோதனையில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 23ஆம் தேதி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டேன். 10 நாள்களுக்குப்பின் குணமடைந்து இன்று வீடுதிரும்பி உள்ளேன். அடுத்துவரும் வாரங்களில் வீட்டில் தனித்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.   கோவிட் பெருந்தொற்றுத் தொடங்கிய மார்ச் கடைசி வாரத்திலிருந்து இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கட்டுரைகளையும் அறிக்கைகளையும் எழுதியுள்ளேன். ஆனாலும் கோவிட் நோயாளியாக இப்பதிவினை எழுதுவது அவசியம் என்று நினைக்கிறேன்.   தனிப்பட்ட முறையில் மிகமோசமான மனநிலையில் நான் துவண்டுகிடந்த போது தொற்று ஏற்பட்டது. உடல்பற்றிக் கவனங்கொள்ளும் திறனற்று இருந்தது மனம். ஆனால் வீட்டில் ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக விழிப்புக்கொண்டு இயங்க வேண்டிய தேவைக்கு உந்தித்தள்ளப்பட்டேன்.   11 வயது சிறுவன் முதல் 66 வயது பெரியவர் வரை வீட்டிலுள்ள பெரும்பாலானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதால் அனைவருக்கும் நுரையீரல் பரிசோதனையையும் இரத்தபரிசோதனையையும் முடித்து நோய்த்தொற்றின் தாக்கத்தை மதிப

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...