இடுகைகள்

Poem லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்) - Yadhum Oore Yavarum Kelir (Kaniyan Poonkunranar)...

 யாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்) - Yadhum Oore Yavarum Kelir (Kaniyan Poonkunranar)... பாடல்: 192 திணை: பொதுவியல் துறை -பொருண்மொழிக் காஞ்சி யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. விளக்கம்: யாதும் ஊரே,யாவரும் கேளிர்; -எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்; தீதும், நன்றும், பிறர் தர வாரா; -தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன; -துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான். சாதலும் புதுவது அன்றே! வாழ்தல் -செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் -வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...