கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?

முந்தைய தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் ஒரு பதவியில் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அதே நிறுவனத்தில் பணி புரிந்தது சாதாரணமான ஒன்றாக இருந்தது.
உலக அளவில் கம்ப்யூட்டர் துறை சார்ந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) துறையின் வளர்ச்சியும், இதன் உடன் விளைவாக ஐ.டி.இ.எஸ்., எனப்படும் ஐ.டி., எனேபிள்டு சர்வீஸஸ் துறைகளின் வளர்ச்சியும் வேலை வாய்ப்பு சந்தையின் ஒட்டு மொத்த தன்மையையே புரட்டிப் போட்டுள்ளது எனலாம்.
அட்ரிஷன், கட்டாய விடுவிப்பு, பணி நீக்கம் போன்ற தாக்குதல்கள்தான் இன்றைய நவீன வேலை வாய்ப்பு சந்தையில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளாக மாறி உள்ளன. இவற்றில் கட்டாயப் பணி நீக்கத்திற்கு உள்ளாகும் நபர்களின் மன ரீதியாக ஏற்படும் அழுத்தம் பெரும் சுமையாக மாறிவிடுகிறது.
சுயமாக பல்வேறு முயற்சிகளைச் செய்தால் ஒழிய இந்த நிலையிலிருந்து மீள்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. எனவே வேலை இல்லாதோர் மற்றும் வேலை இழந்தோருக்கு ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய நான்கு உத்திகளை மென்எக்ஸ்எஸ்பி இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் சாராம்சத்தை உங்களுக்காகத் தருகிறோம்.

>>>ஆங்கிலத்தில் அசத்த டிப்ஸ்...

இன்றைய காலத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் போன்றவற்றில் திறமையாக செயல்பட, ஆங்கிலம் அவசியம். ஆங்கிலத்தில் பேசும் போது தன்னம்பிக்கை மிளிரும். பிற மொழி பேசும் ஒருவரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் அத்தியாவசியம். பள்ளி, கல்லுõரிகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆங்கிலத்தில் பேச, எழுத தெரிந்திருந்தால், வேலை உங்களை தேடி வரும் என்பதில் ஐயமில்லை. வேலையில் திறமை இருந்தும், ஆங்கில அறிவு இல்லாததால் குறைந்த சம்பளத்தில் ஏதோ ஒரு வேலை செய்யும் சூழலும் ஏற்படுகிறது. ஆங்கிலம் பேசுவதற்கு சில டிப்ஸ்களை தவறாது கடைபிடித்தால் நீங்கள் ஆங்கிலத்தில் அசத்தலாம்.
* எந்த மொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படியுங்கள்.
* ஆங்கிலத்தை நம்மால் படிக்க முடியாது என்ற எதிர்மறையான எண்ணங்களை கைவிடுங்கள்.
* ஆங்கில நாளிதழ், புத்தகங்கள் போன்றவற்றை தினமும் வாசியுங்கள்.
* ஆங்கிலத்தில் சிறிது சிறிதாக எழுத பழகுங்கள்.
* படிக்கும் போது தெரியாத, கடினமான வார்த்தைகளின் அர்த்தத்தை, அகராதியில் பாருங்கள்.
* தவறாக பேசினாலும் பரவாயில்லை, ஆங்கிலத்தில்தான் பேசுவேன் என்ற நம்பிக்கையுடன் பேசுங்கள்.
* ஆங்கில டி.வி., செய்திகள், படங்கள் போன்றவற்றை தினமும் பாருங்கள்.
* ஆங்கிலத்தில் புலமை பெற்றவரிடம், ஆங்கில உச்சரிப்பை கற்றுக்கொள்ளுங்கள்.

>>>கேட் தேர்வில் யார் அதிகம்?

இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
கேட் நுழைவுத் தேர்வு அக்., 11ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 6 வரை நடக்கிறது. தேர்வு முடிவு 2013 ஜன., 9ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியாவில் உள்ள 13 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்கள், 100 தனியார் கல்வி நிறுவனங்களில், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு, 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 4.2 சதவீதம் அதிகம். விண்ணப்பித்த மாணவிகளின் எண்ணிக்கையும் 8.6 சதவீதம் அதிகரித்தது.
விண்ணப்பித்துள்ளவர்களில் 67.6 சதவீதம் பேர் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து 31,040 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் இருந்து 25,270 பேரும், டில்லியில் இருந்து 21,507 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
டாப்  5 நகரங்கள்
* டில்லி  21,224 பேர்
* பெங்களூரு 19,553 பேர்
* மும்பை  16,895 பேர்
* ஐதராபாத்  16,138 பேர்
* புனே  13,368 பேர்
தேர்வு முடிவுகளில், எந்தெந்த மாநிலம் எந்த இடத்தை பெறுகிறது என்பதை, பொறுத்திருந்து பார்க்கலாம்.

>>>மாணவனின் சம்பளம் 70 லட்சம்

கேரளாவில் உள்ள கோழிக்கோடு என்.ஐ.டி., கல்லுõரியில் படிக்கும் திஜூ ஜோஸ் என்ற எம்.டெக்., மாணவர், ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியுள்ளார். கேரளாவில் இதுவரை எந்த இன்ஜினியரிங் மாணவரும், இவ்வளவு பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததில்லை. இவர்தான் முதல் முறையாக சாதித்துக் காட்டியுள்ளார். இதற்குமுன் 22 லட்சம் ரூபாய் என்பதே சாதனையாக இருந்தது. கல்லூரியில் நடந்த வளாகத் தேர்வில் கூகுள் நிறுவனம், அமெரிக்காவின் கலிபோர்னியா அலுவலகத்துக்கு இம்மாணவனை தேர்வு செய்துள்ளது. இன்னும், இம்மாணவருக்கு ஓராண்டு படிப்பு பாக்கி உள்ளது. இதன் பின் 2013 அக்., மாதத்தில் பணியில் சேர இருப்பதாக அம்மாணவர் தெரிவித்துள்ளார்.

>>>மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்

மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது. மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன்.
பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

>>>பொறியியல் கலந்தாய்வில் 5 மாணவர்கள் பங்கேற்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி ஒ.சி. பிரிவு மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில், நடந்த பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். கடிதம் அனுப்பப்பட்டிருந்த மேலும் 822 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி சேர்க்கையில், 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதில், ஓ.சி., பிரிவில், 31 சதவீதம் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், இப்பிரிவினருக்கு, 50 சதவீதம் வழங்க வேண்டும் என்பது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு. மீதமுள்ள, 19 சதவீத இடங்களை கூடுதலாக ஏற்படுத்தி, அதனை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, 827 பேருக்கு, கலந்தாய்வு கடிதங்களை, அண்ணா பல்கலை அனுப்பியது. நேற்று நடந்த கலந்தாய்விற்கு, வெறும் ஐந்து மாணவர் மட்டுமே வந்தனர்; 822 பேர் வரவில்லை. வந்த ஐந்து பேரும், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் மதுரை தியாகராயர் கல்லூரியில், ஏற்கனவே பொறியியலில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்கள், பாடப் பிரிவுகளை மட்டும் மாற்றிக் கொண்டதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. கலந்தாய்வு கடிதங்களை பெற்ற மாணவ, மாணவியர், ஏற்கனவே நல்ல கல்லூரிகளில், விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்ந்து விட்டதால், அவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை எனவும், பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ஆசிரியர் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும், பல்வேறு பள்ளிகளில் காலியாக உள்ள, உடற்பயிற்சி மற்றும் ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,400 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முன்னுரிமை விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு கூட முன்னுரிமை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, இப்பணிகளுக்கு ஏற்ற மாற்றுத் திறனாளிகள் யாரும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்திருக்கவில்லை என்றால், அத்தகவல் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் . அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி, 3 சதவீத ஒதுக்கீடு அளித்த பின், பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அது வரையில், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்

   உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்  Hi-tech Lab மற்றும் Smart Classகளில் AIக்கள் செய...