கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 26 [November 26]....

நிகழ்வுகள்

  • 1778 - ஹவாயன் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
  • 1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1922 - எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
  • 1941 - பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
  • 1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
  • 1949 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • 1950 - மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
  • 1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
  • 1965 - சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செய்மதியை விண்ணுக்கு அனுப்பியது.
  • 1983 - லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
  • 2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
  • 2002 - இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1936 - லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)
  • 1939 - அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
  • 1948 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
  • 1948 - வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
  • 1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்
  • 1939 - டீனா டர்னர், அமெரிக்க ராக் அன் ரோல் இசைக்கலைஞர்.

>>>சரித்திரம் பயில்வோம்! - வெ.இறையன்பு

இப்போதெல்லாம் பள்ளிகளில் அறிவியலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சரித்திரத்துக்குக் கொடுப்பதில்லை. இலக்கியத்துக்கு இடமே இல்லை. வரலாறும் இலக்கியமும் படித்தால் வேண்டிய படிப்புக்கு விண்ணப்பம் போட முடியுமா என்று மாணவர்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

வரலாறு, இலக்கியம் பண்டங்களல்ல, பாத்திரங்கள். உணவை உண்ணுகிற பாத்திரம் நிறைவு செய்வது போல, அவை முழுமையான வாழ்க்கை நெறியை வழங்குகின்றன.

வரலாறு நூல்களைத் தேர்வு செய்து படிக்கும் போது, கதைப்புத்தகத்தைப் போல கலகலப்பூட்டு கிறது. பாடப்புத்தகங்களில் மதிப்பெண்களுக்காகப் படிக்கிற போது கவிதைகள் கூட கந்தகமாகிவிடுகின்றன. விருப்பத்துடன் வாசிக்கின்றபோது கந்தகம் பற்றிய குறிப்பு கூட சந்தனமாகிவிடுகிறது.

சுவாரசியமான பல சரித்திர நூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன. சரித்திரத்தை இலக்கியங்கள் மூலமும் வாசிக்கமுடியும். ஷேக்ஸ்பியர், மார்லோ, பெர்னாட்ஷா ஆகியோருடைய பல நாடகங்கள் சரித்திரத்தின் பதிவுகள், வரலாற்றின் பிழிவுகள்.

மாபெரும் மன்னர்களின் வீழ்ச்சிக்கு ஒரே ஒரு தவறால் நிகழந்ததை நமக்கு அவை உணர்த்துகின்றன. அதீத நம்பிக்கையால் ஜூலியஸ் சீசர் கத்திகளின் உத்திகளுக்குப் பலியானார். ஹேம்லெட் முடிவெடுக்காமல் தடுமாறியதால் தள்ளாடினார். மேக்பெத் அதிக அவாவால் அழிந்தான். நெப்போலியன் சரியாகத் திட்டம் இடாததால் தொய்வுற்றார். ஹிட்லர் அகங்காரத்தால் அழிந்தார்.

சரித்திரத்தை எவ்வளவு நாம் புறக்கணித்தாலும் அவை திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன், நம் வாழ்வில் கூட மீண்டும் பழைய தவறுகளையே நாம் செய்து கொண்டே இருக்கிறோம். விழுந்த இடத்திலேயே விழுகிறோம்.

தலைமைப் பண்பை உறிஞ்சிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு, சரித்திரம் அகராதி. மேன்மையான உயர்ந்த குணங்கள் சிலரை உச்சாணிக் கொம்பிலே அமர்த்தியதை வரலாற்றை வாசிப்பதிலிருந்து கிரகித்துக் கொண்டு நாமும் அவற்றை நோக்கி பயணிப்பதற்கு நம்மை அவை உசுப்பி விடுகின்றன.

மகாத்மா காந்தி எத்தனைப் போராட்டங்களைச் சந்தித்தார் என்பதைத் தெரிந்து கொள்கிறபோதுதான், மாதப் பரீட்சைக்கே மனமொடியும் நாம் நம்மைத் திருத்திக்கொள்ள முடியும். வைராக்கியம் வளர்க்கவும், இடறாமல் இருக்கவும் சாதனை செய்தவர்களின் சரித்திரச் சான்றுகள் நமக்கு என்றும் உறுதுணை புரியும்.

>>>மருத்துவ மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

"இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, மருத்துவ மாணவர்களின் தேர்வு முடிவுகளை, மீண்டும் வெளியிட, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என, சுகாதார துறை அமைச்சர் விஜய், கூறியதை அடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தை, மருத்துவ மாணவர்கள் வாபஸ் பெற்றனர். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான ஆண்டு தேர்வு, மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள, புதிய நடைமுறைகளை வாபஸ் பெற வேண்டும்; தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களில், தேர்ச்சி பெற்ற பின்தான் மாணவர்கள், அடுத்த ஆண்டு படிப்பை தொடர வேண்டும் (பிரேக் சிஸ்டம்) என்ற நிபந்தனையை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின், மாணவ, மாணவியர், 500க்கும் மேற்பட்டோர், சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பல்கலைக்கு வந்த அமைச்சர் விஜய், மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளுடன், 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மாணவர்களின், தேர்வு தாள்களை, மீண்டும் மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். "பிரேக் சிஸ்டத்தை" திரும்ப பெறவும், பல்கலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என, அமைச்சர் விஜய், உறுதி அளித்தார். இதையடுத்து, தாங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் தெரிவித்தார்.
அமைச்சரை சாதுர்யமாக மடக்கிய மாணவர்கள்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, மருத்துவ மாணவர்கள் அறிவித்திருந்தனர். அதேசமயம், அமைச்சரின் வருகையை அறிந்த அவர்கள், சேப்பாக்கத்தில் பெயரளவிற்கு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சமீபத்தில், தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூற, தலைமைச் செயலகத்திற்கு வந்த மருத்துவ மாணவர்களை, சந்திக்க மறுத்த அமைச்சர் விஜய், நேற்று, வேறு வழியின்றி, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாயிற்று.

>>>உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது. அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
"மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்" என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>அரையாண்டு தேர்வு குளறுபடி : தேர்ச்சி விகிதம் குறையுமா?

அரையாண்டு தேர்வு கால அட்டவணை குளறுபடியால், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு,செய்முறை தேர்வு நடத்துவதில், தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் எனவும் அஞ்சப்படுகிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு, டிசம்பர் 19 ல், துவங்கி ஜனவரி 10 ல் முடியும்படி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 23ல் தேர்வு முடியும். விடுமுறை நாட்களில், விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆசிரியர்களும், செய்முறை நோட்டு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாணவர்களும் மேற்கொள்வர். ஜனவரி முதல் பிப்ரவரி வரை மூன்று திருப்புதல் தேர்வு நடைபெறும். தற்போது, அரையாண்டு தேர்வே, ஜனவரி 10 வரை நடக்கிறது. அதன் பிறகு பொங்கல் விடுமுறை வருகிறது. ஜனவரி 15க்கு பிறகு மாணவர்கள் செய்முறை தேர்வில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால், திருப்புதல் தேர்வுக்கு தங்களை தயார்படுத்த முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்படும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: ஜனவரி இரண்டாவது வாரம் வரை அரையாண்டு தேர்வை நடத்தி விட்டு, உடனே திருப்புதல் தேர்வை நடத்தினால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர். செய்முறை தேர்வுக்கு மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க முடியாத நிலை ஏற்படும். அரையாண்டு தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை, இயக்ககம் மாற்றியமைத்திட வேண்டும். இல்லையேல், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறையும், என்றார்.

>>>பொதுத்தேர்வு: அரசு பள்ளிகளில்100 சதவீதம்தேர்ச்சி ; 2024ல் இலக்கு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.35 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை, மாற்றப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தையும், தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம், தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது.

தேர்ச்சியில் முரண்பாடு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம், 85 முதல், 87 வரை இருந்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது. மேலும், தென் மாவட்டங்கள், கல்வி தரத்தில் உயர்ந்தும், வட மாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன.

கல்வித்துறை ஆய்வு:
இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து, கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை, விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சியில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

கணிதத்தில் தோல்வி அதிகம்:பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம், தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, கணிதப் பாடத்தில், 10.8 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில், 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். பாட வாரியாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடத்தில் தான், மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழில், 0.8 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில், 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும், மிகக் குறைவாக, 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள், 682. அரசுப் பள்ளி மாணவர்களில், 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதுவே, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.6 ஆக உள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த பிளஸ் 2 தேர்வில், 325 அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சி, 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து, 2024ம் ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில், சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க, தற்காலிகமாக, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியரை நியமித்துக்கொள்ள, பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
* 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன், பாட நிபுணர்களின், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இலக்கை எட்ட முடியும் என, நம்புகிறோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>"கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு"

கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், 2010, ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பள்ளிகளில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளது. இதை மறைத்து, பெரும்பாலான பள்ளிகளில், புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையே இருக்கக்கூடாது எனவும், இதற்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான பிரச்சாரம், "பிரிட்ஜ் கோர்ஸ்&' மையங்கள் என, பல்வித செயல்பாடுகள் இருந்தன. தற்போது, அவையும் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால், கிராமப்பகுதிகளில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் சேர்ப்பதற்கான, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளியில், இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில், சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மூன்று மாதம் வரை பயிற்சி வழங்கி, அந்தந்த வயதுக்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பல குழந்தைகளை, பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல், விவசாயம் உட்பட, பல்வேறு பணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். கலெக்டரிடம் புகார் கொடுத்து, போலீஸ் மூலம் மிரட்டி, இடைநின்ற மாணவனை பள்ளிக்கு வரவழைத்தாலும், ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை உள்ளது.
உயர் அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர். இடையில் நிற்கும் மாணவன், தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோ, வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோ, கணக்கு காட்டி விடுகின்றனர். தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...