கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 +2 தேர்ச்சி தகுதியை பதிவு செய்யும்பொழுது Group / Stream என்பதில் செய்ய வேண்டிய பதிவு குறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவுறுத்தல்...

 +2 தேர்ச்சி தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் பொழுது இறுதியாக Group / Stream என்பதில் கீழ்கண்டவாறு பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

👇👇👇

Group 1 - Maths - Biology

Group 2 - Pure Science 

Group 2a - Maths - Computer 

Group 3 - Commerce - Accountancy

Group 4 - Other than the above.

🍁🍁🍁 சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 - 10.3.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் - தொழில்நுட்ப கல்வி இயக்குனர் கடித எண்: 25451/டி4/2020, நாள்: 16-10-2020...

 


🍁🍁🍁 தமிழக அரசுப் பள்ளி மாணவர் ஜீவித் குமார் இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் 720க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம்...

 💥 NEET 2020 Entrance Exam Result - Working Now!

💥 தமிழக அரசுப் பள்ளி மாணவர் ஜீவித் குமார் இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் 720க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம்...

💥 நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு 

💥 கடந்தாண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு 57.44% ஆக அதிகரிப்பு


நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக அரசு பள்ளி மாணவன் சாதனை...

மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தேனி மாணவர் ஜீவித்குமார் சாதனை படைத்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் அரசு பள்ளிகள் மாணவர்களில் முதல் மாணவராக சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதும் 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோ்வில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன...


🍁🍁🍁 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு - இது தொடர்பாக வரும் 21 ஆம் தேதி அறிவிப்பு வரும் - (நாளிதழ் செய்தி)...

 


🍁🍁🍁 இந்த தொடர்வண்டிகள் உரசிக் கொள்ளாமல் செல்வதே அதிசயம்தான்...!!

 Sapporo Station (Sapporo Municipal Subway), Japan


>>> Click here to view Sapporo Station (Sapporo Municipal Subway), Japan


🍁🍁🍁 அரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்...

அரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்:

💥 அரசாணை 37-ஆனது வெளியிடப்பட்ட நாளான 10-03-2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.

💥 10-03-2020 க்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியருக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது.

💥 10-03-2020க்கு முன் உயர்கல்வி அல்லது துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்று, நிர்வாக காரணங்களுக்காக அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கை காரணமாக ஆணை வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி 31.03.2021க்கு முன் ஆணை வழங்கப்பட வேண்டும்.

💥 அரசாணை 37 ஆனது ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறையில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கும் பொருந்தும்.

💥 முன் ஊதிய உயர்வும், ஊக்க ஊதிய உயர்வும் ஒன்றுதான்.

💥 ஊக்க ஊதிய உயர்வு/ முன் ஊதிய உயர்வு தொடர்பாக 10-03-2020க்கு முன் பிற துறைகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது ஊதியப் பட்டியல் ஒப்பளிக்கும் அலுவலர் உயர்கல்வி தகுதியும், அதற்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் ஆணையும் குறிப்பிட்ட தேதிக்கு (10-03-2020) முன்னர் பெறப்பட்டுள்ளதா  என்பதையும், அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி சரியானதுதானா என்பதையும் உறுதி செய்து  கொண்டு ஊதியப்பட்டியல் அனுமதிக்கலாம்...

💥இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதை மட்டும் மேலோட்டமாக பார்த்து விட்டு கடந்து செல்லாமல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்கள், தற்போதைய அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, ஊக்க ஊதியம் பெற முயற்சிக்க வேண்டும். அநற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதி 31.03.2021. 

தெளிவுரை வரிசை எண்: 7 மற்றும் 9 ஐ கவனிக்கவும்.



>>> அரசாணை 116, நாள் : 15-10-2020ஐ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 அரசாணை எண்: 116 - நாள் : 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -அரசாணை 37, நாள்: 10-03-2020 ஆனது ஆசிரியர்கள் , மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் - பணியாளர்கள் மற்றும் சீர்திருத்தத்துறை விளக்கம்...

 Advance increments Dispensation/cancellation of the scheme of sanction of advance increment in all departments orders issued further clarification issued...

அரசாணை (நிலை) எண்: 116, நாள்: 15-10-2020...

Personnel and Administrative Reforms FR IV department G.O.Ms.No.116, Dated: 15-10-2020...

>>> Click here to Download G.O.(Ms): 116, Dated: 15-10-2020...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 - Answer Key - Part B & Part C

        TNPSC குரூப் 4 - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 12-07-...