கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பி.எட்., படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வமில்லை... டி.இ.டி. தேர்வை எதிர்கொள்ள தயக்கம்...

நடப்பு கல்வியாண்டு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பி.எட்., பட்டதாரிகள், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.
கடந்த காலங்களில், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு இணையாக, பி.எட்., படிப்புக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, பெண்கள் மத்தியில், அதிக ஆர்வம் இருந்தது. பி.எட்., படித்து, அரசு பள்ளியில், ஆசிரியர் பணிக்கு சேர்ந்துவிட்டால், ஓய்வு பெறும் வரை, எவ்வித பிரச்னையும் இல்லை என்ற சூழ்நிலை, முன்பு இருந்தது. திறமையான ஆசிரியர்கள் மட்டும் பணியாற்ற, வழிவகுக்கும் வகையில், பி.எட்., முடித்தவர்களும், படிப்பவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது; தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பணியில் உள்ள ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., பிரிவில் 125, எம்.எட்., பிரிவில் 35 என, மொத்தம் 160 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டு, பி.எட்., படிப்பு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த 11ல் துவங்கியது; 18ல் நிறைவடைந்தது. 700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்; கடந்த கல்வியாண்டில் 900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். எதிர்காலத்தில், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில், ஆசிரியர் பணிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்வியியல் படிப்பில் சேர, மாணவியரிடம் ஆர்வம் குறைந்து வருவது, ஆசிரியர் சமுதாயத்தினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் இந்திராணி கூறியதாவது: பெரும்பாலான பி.எட்., மாணவ, மாணவியர், அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக, கல்வி கற்கின்றனர். தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில், பி.எட்., பட்டம் பெற்றோர், ஆசிரியர் தகுதி தேர்விலும் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது; தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில், அரசு கல்வியியல் கல்லூரி பி.எட்., மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் குறைந்துள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு, தனியார் பள்ளிகளில், அதிக ஊதியம் வழங்கப்படுவது குறித்தும், சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எதிர்காலத்தில், தகுதி மற்றும் திறமை கொண்டிருந்தால், அரசு பள்ளிகளைப் போன்றே, தனியார் பள்ளிகளிலும், அதிக ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.1 - Updated on 26-03-2026

     KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.1 *  IFHRMS   Kalanjiyam Mobile App New App New Update  *  Version 1.23.1 *  Updated on 26-03-20...