கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>2030ல் இந்திய பல்கலை.,களில் 40 கோடி மாணவர்கள்

 
இந்தியாவில் மேற்படிப்பைத் தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மேற்படிப்பைத் தேர்வு செய்பவர்களின் சதவிகிதம் கடந்த 4 ஆண்டுகளில் 12.4 சதவீதத்தில் இருந்து 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 40 கோடியை எட்டிவிடும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானதாக இருக்கும் என்றார்.
எனினும், இந்த அளவு மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு தற்போதுள்ளதை விட கூடுதலாக 800 பல்கலைக்கழகங்களும், 50 ஆயிரம் கல்லூரிகளும் தேவைப்படும் எனத் தெரிவித்த அவர், இவற்றை உருவாக்குவதில் ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டாலும், பல மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...