கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வேலை வாய்ப்பு, பயிற்சி துறை இணையதளத்தில் குளறுபடி

வேலை வாய்ப்பு, பயிற்சி துறைக்கான இணையதளத்தில், சிவகங்கை மாவட்டத்திற்கான பதிவுகளில், குளறுபடி உள்ளதால், விண்ணப்பதாரர்கள் அதைப் பயன்படுத்த முடியாமல், சிவகங்கைக்கு அலைகின்றனர்.
வேலைவாய்ப்பிற்கான புதிய பதிவு, கூடுதல் தகுதி சேர்த்தல், புதுப்பித்தல் போன்ற பணிகள், தற்போது, "ஆன்-லைன்" மூலம் செய்யப்படுகின்றன. இதற்காக விண்ணப்பதாரர்கள், அதற்கான இணைய தளமான, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்துகின்றனர். அதில், அவர்களின் பதிவு எண்ணைப் பதிவு செய்கையில், பலருக்கும் குளறுபடியான தகவல்கள் வருகின்றன.
வேறு பெயர்கள், கூடுதல் தகுதி பதிவு செய்யாதது, புதுப்பித்தல் பதிவாகாதது போன்ற பல குளறுபடிகள் உள்ளன. அ.காளாப்பூரைச் சேர்ந்த, எம்.அறிவு என்பவருக்கு, ஆக., 2014ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவரது வேலை வாய்ப்புப் பதிவு அட்டையில் அதற்கான பதிவு உள்ளது. ஆனால், இணைய தளத்தில், அவர் பதிவு எண் தவறானது என, பதில் வருகிறது. திருப்புத்தூரரைச் சேர்ந்த, பி.வெங்கடேசன் என்பவருக்கு, ஜன., 2014ம் தேதி வரை, புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கும், பதிவு எண் தவறானது என்றே, பதில் வருகிறது; "ஆன்-லைன்" முறை இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை.
இதுபோன்ற பிரச்னையைச் சந்திக்கும் மக்கள், மீண்டும், சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, அலைய வேண்டியுள்ளது. "இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த, புதிய தகவல்களை உடனடியாக இணைய தளத்தில் ஏற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நிர்வாகம் எடுக்க வேண்டும்" என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நீக்கம் (Dismissal from service) தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

 பணியில் இருந்து நீக்குவது (Dismissal from service) தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் Supreme Court's new guidelines r...