கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாநில அதிகாரிகள் பள்ளிகளில் நேரடி தொடர்பு கொள்ள விவரம் சேகரிப்பு

கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
தமிழகத்தில், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரை, இந்த தகவல் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, குடிநீர், கழிவறை வசதிகள், ஆசிரியர்கள் கல்வி தகுதி, இனத் தகுதி, மாணவர்களின் இன மற்றும் வகுப்பு வாரி விவரங்கள் உட்பட பல விவரங்களை சேகரித்து, கணினியில் பதிவு செய்ய உள்ளனர்.
இதன்மூலம், மாநிலத்தில், கடைக்கோடியில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், பள்ளி குறித்து, மாநில அலுவலர்கள் நேரிடையாக விவாதிக்கவும், தகவல் சேகரிக்கவும் முடியும். இதற்காக, தனி இணையதளம் துவக்கப்பட உள்ளது. விவரங்களை சேகரிக்கும் பணியில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியத் திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக CPS ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

  ஓய்வூதிய திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு (பத்திரிகை செய்தி) ...