கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருத்துவப் பல்கலை முடிவுகளில் தலையிட முடியாது: இந்திய மருத்துவ கவுன்சில்

ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் தனக்கான தேர்வு மற்றும் மதிப்பீட்டு விதிமுறைகளை, சுய விருப்பத்தின்படி வகுத்துக்கொள்ள முடியுமென்றும், இதில் தலையிட முடியாதென்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. இத்தகவலை, பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு, தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு ஆகிய அனைத்துவகைத் தேர்வுகளிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி என்ற புதிய விதியை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கொண்டு வந்தது. ஆனால், இப்புதிய திட்டத்திற்கு மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. பலர் தடையாணை வாங்க நீதிமன்றம் சென்றனர். இந்த எதிர்ப்புகளின் விளைவாக, தமிழக அரசு, அப்போதைய பருவ தேர்வுகளுக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து உத்தரவிட்டது. பின்னர், மீண்டும் அதே விதியை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை கொண்டு வந்தது. அதற்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. பலர் நீதிமன்ற படிக்கட்டுகள் ஏறினர். இந்நிலையில்தான், இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. பல்கலைக்கழகம் வகுக்கும் விதிமுறைகளில் தலையிட முடியாது என்றும், இதுபோன்ற முடிவுகள் பல்கலையின் சுயஉரிமை என்றும் MCI தெரிவித்துள்ளது. இதன்மூலம், எழுத்துத் தேர்வாக இருந்தாலும் சரி, செய்முறைத் தேர்வாக இருந்தாலும் சரி, அவைகளில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றால்தான் தேர்ச்சிப் பெற முடியும் என்ற புதிய விதிமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. "கடந்த 1997ம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 15 வருடங்களாக, பாடத்திட்டம் மற்றும் தேர்வு மதிப்பீட்டு முறைகளில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே, இந்தப் புதிய மாற்றம் காலத்தின் கட்டாயம். இதை செய்தே ஆக வேண்டும். இப்புதிய விதிமுறை மக்களின் வரவேற்பை பெற்ற ஒன்று" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12-06-2026 TN SCERT Special TET 1 EVS & TET 2 Science - Paper 2 Social Science SESSION 2 - Youtube Links

  Good afternoon, all. Kindly note today's session and its timings Click here for SPECIAL TET PAPER 1 EVS SESSION 1 https://www.youtube....