கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அண்ணாமலை பல்கலை நிதி நெருக்கடி குறித்து விசாரணை : அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலையில், நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய, பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்த வேண்டும், என அனைத்து பல்கலை அலுவலர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறினார். அவர் கூறியதாவது: அண்ணாமலை பல்கலை ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு, 50 சதவீதம் ஊதியம் என்றும், 50 சதவீதம் ஆட்குறைப்பு செய்யவும் முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேவையற்ற பணி நியமனங்களை செய்துவிட்டு, நிதி நெருக்கடி என காரணம் காட்டி, 13 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் முடிவெடுத்திருப்பது, பல்கலையின் மாண்பிற்கு ஏற்றதல்ல. நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்தவேண்டும். ஆசிரியர், அலுவலர் பணி நியமனம் குறித்த விதிகளை, அண்ணாமலை பல்கலையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு, குழு அமைத்து சிறந்த கல்வியாளர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு, பாதி சம்பள அறிவிப்பை, திரும்ப பெறவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.. தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு...