கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்-1 தேர்வு தள்ளிவைப்பு - டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.செயலர் விஜயகுமார் அறிவிப்பு:துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, வரும், 30ம் தேதி நடக்கும் எனவும், இதற்கு, 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க, 24ம் தேதி வரை, வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் பதிவு செய்த, இரு நாட்களுக்குள், கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார். 25 காலி பணியிடங்களுக்கு, ஏற்கனவே, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், மேலும், 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-03-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை ...