கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளிக்கு ஒரே ஆசிரியர்: பாடம் நடத்துவதில் சிக்கல்

வால்பாறை அருகே, பள்ளிக்கு ஒரே ஆசிரியர் இருப்பதால், ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா உபாசி(ஈட்டியார்). இங்குள்ள அரசு நலப்பள்ளியில் 42 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார்.
ஐந்து வகுப்புகளுக்கும் இவர் ஒருவரே பாடம் நடத்த வேண்டியுள்ளது. இப்பள்ளியில், எஸ்.எஸ்.ஏ.,சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கப்படவில்லை. போதிய கட்டட வசதி இருந்தும், ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.ஏ.,பயிற்சிக்காக சென்றாலோ, விடுப்பில் சென்றாலே பள்ளிக்கு விடுமுறை விடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தியிடம் கேட்ட போது,""உபாசி அரசு நலப்பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பது குறித்து, தலைமை ஆசிரியரிடம் இருந்து கடிதம் பெறப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-03-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம்: பெருமை குறள் எண்...