கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>படித்த பள்ளியை தத்து எடுத்த எம்.எல்.ஏ.! - ஆற்காடு அசத்தல்

னியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திக் காட்டவேண்டும் என்ற நோக்கோடு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் ஆற்காட்டில் உள்ள‌ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தத்து எடுத்து இருக்கிறார்’ 
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் பேசியபோது, 'இந்தப் பள்ளி 85 ஆண்டு பழைமை வாய்ந்தது. இந்தப் பள்ளியின் பழைய மாணவர்தான், எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று இருக்கும் வி.கே.ஆர்.சீனிவாசன். வெற்றி பெற்றதும் இந்தப் பள்ளிக்கு முதல் விசிட் செய்து, இந்தப் பள்ளியை தத்து எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுத்திருக்கிறார். இப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. வகுப்பறைகள், மீட்டிங் ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கும் வேலைகள் முடிந்துவிட்டன.
எங்கள் கழகத்தின் மூலமாக நியமிக்கப்பட்டிருக்கிற ஆசிரியர், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளருக்கான  மாதச் சம்பளத்தை எம்.எல்.ஏ. தன் சொந்தப் பணத்தில் வழங்குகிறார். மேலும் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் பரிசுகளும் அறிவித்து இருக்கிறார்'' என்று பட்டியல் போட்டார்கள்.
பள்ளியின் சார்பில் பேசியவர்கள், ''ப‌ள்ளியின் சுற்றுச் சுவ‌ர் முழுமையாக‌ அமைக்க‌ப்படுவது நல்ல பாதுகாப்பு. வெளி ஆட்களால் பள்ளிக்குள் சமூகக் குற்றம் நிகழாமல் தடுக்கப்படும். இதுவ‌ரை ப‌ள்ளிக்கு காவ‌லாளி மற்றும் துப்புரவுப் ப‌ணியாள‌ர் இல்லாத குறையும் தீர்ந்துபோனது. சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் என முக்கியத் தேவைகளை செய்து கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்கள்.
சீனிவாச‌னைத் தொடர்புகொண்டபோது, ''அம்மாவின் ந‌ல்லாட்சியில் ம‌க்க‌ளின் தேவைக‌ள் அனைத்தும் நிறைவேற‌ வேண்டும் என்ற‌ நோக்கோடுதான் எனது பணிகளை சேவை ம‌ன‌ப்பான்மையோடு செய்துவ‌ருகிறேன். அம்மாவின் ஆட்சியில் மாண‌வ‌ மாண‌விக‌ளுக்கென‌ அரிய‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்றன. சிற‌ந்த‌ க‌ல்விச் சேவை செய்ய‌ வேண்டும் என்ற ஆர்வ‌த்தால்தான் ஆற்காடு அர‌சு ஆண்க‌ள் மேல்நிலைப் ப‌ள்ளியை த‌த்து எடுத்தேன். ஏழை மாண‌வ‌ர்களுக்கு வ‌றுமையாலோ வ‌ச‌தி வாய்ப்பு இன்றியோ அவ‌ர்க‌ளின் க‌ல்வி பாதிக்க‌ப்ப‌ட்டுவிட‌க் கூடாது என்ற‌ எண்ண‌த்தில் அவர்களுக்கு மறுப்பின்றி உதவிகள் செய்து வருகிறேன். ‌ஐந்து ஆண்டுகளுக்கு என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து இப்பள்ளியை தத்து எடுத்திருக்கிறேன். இந்த ஒப்பந்த காலங்களுக்குள் அம்மாவின் ஆசியோடு எந்த தரத்துக்கும் குறை இல்லாத பள்ளியாக இதனை உருவாக்கிக் காட்டுவேன்'' என்றார்.
நாமும் பாராட்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிசார் கோரிக்கைகளை EMIS வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்...

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிசார் கோரிக்கைகளை கல்வி மேலாண்மை தகவல் முறைமை EMIS வாயிலாக விண்ணப்பிக்க EMIS இணையதளத்தில் சிறப...