கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கிராமங்களில் தேர்வு மையம் இல்லை: அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், கிராமப்புற அரசுப்பள்ளிகள் அதிகளவில், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கான அனுமதியை, தேர்வுத்துறை வழங்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைத்தால், பணிச்சுமை அதிகரிக்கும். இதனால், பலர் தேர்வு மையங்களுக்கு அனுமதி கேட்பதில்லை.
தனியார் பள்ளிகள் துவங்கிய ஒரு ஆண்டில், தேர்வு மையங்களை பெற்று விடுகின்றன. அரசுப்பள்ளிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமப்புறத்தில் இருந்து தேர்வு எழுத, நகரங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில் இருந்து, சரக்கு வாகனங்கள், டூவீலர்களில் தேர்வு மையங்களுக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
அரசுப்பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இருந்தும், கிராமப்புற மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அரசுப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    தமிழ்நாடு முழுவதும் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு  நாளை சனிக்கிழமை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அ...