கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சத்தம் போடாதே!

வேலையில்லாத மாடசாமி வேலை தேடி ஊர் ஊராத் திரிஞ்சான். பக்கத்து ஊர்ல ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்திருக்குன்னு கேள்விப்பட்டு, அங்க... போனான். வேலை கேட்டு வந்த அவனை பாத்த சர்க்கஸ் கம்பெனி மொதலாளி, "உனக்கு வேலை தர்றேன். ஆனா அது கொஞ்சம் கஷ்டமான வேலை. உன்னால செய்யமுடியுமா..?!"ன்னார். "என்ன வேலை வேணும்னாலும் செய்வேன்"னான் மாடசாமி.

"எங்ககிட்ட இருந்த மனுஷக்குரங்கு செத்துப் போச்சு. நீ என்ன பண்றே, அந்த மனுஷக்குரங்கு மாதிரி வேஷம் போட்டு நெசமான குரங்கு மாதிரியே ஜனங்க முன்னாடி நடிக்கணும். அதான் உன் வேலை" என்றார் மொதலாளி.


"சரி"ன்னு சந்தோஷமா வேலையில் சேர்ந்தான் மாடசாமி.

குரங்கு வேஷம் போட்டுட்டு அப்படியே அச்சு அசலா... குரங்கு மாதிரியே சேட்டைகள் பண்ணினான். வயித்தையும், தலையையும் சொறிஞ்சிக் கிட்டு பிரமாதமா நடிச்சான். ஜனங்க மத்தியில ஒரே ஆரவாரம். குரங்கு போடுற குஸ்தியை பார்க்கவே கூட்டம் அலைமோதுச்சு.


ஒரு நாள் குரங்காக மாடசாமி நடிச்சுட்டு இருக்கும்போது சிங்கம் இருந்த கூண்டுக்குள்ளே தவறி விழுந்துட்டான். அவ்வளவுதான் குரங்கு வேஷத்துல இருந்த மாடசாமிக்கு பேயறைஞ்சது போல ஆயிடுச்சு..!


அவனுக்கு பக்கத்துல ரெண்டடி தூரத்துல... சிங்கம். சிங்கம் மெதுவா அவன் பக்கத்துல வந்துச்சு. பயத்துல நடுநடுங்கிப்போன மாடசாமி, "உதவி செய்ங்க"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டான். அப்போ...," உஷ்... சத்தம் போடாதே. விஷயம் தெரிஞ்சா... நம்ம ரெண்டு பேருக்குமே வேலை போயிடும்னு" சொன்னது... சிங்க வேஷத்துல இருந்த ராமசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை

  Dr. Radhakrishnan Award Application 2026–2027 User Manual Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை Step 1 : Login into...