கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>172 கல்வி நிறுவனங்கள் கதி என்ன ஆகும்?

சென்னை பெருநகரப் பகுதியில், விதிமீறல் கட்டடங்களோடு செயல்படுவதாகக் கருதப்படும், 172 கல்வி நிறுவனங்களுக்கு சி.எம்.டி.ஏ., அனுப்பிய நோட்டீஸ்கள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள அடுக்கு மாடி கட்டடங்கள் அனைத்தும், சி.எம்.டி.ஏ.,விடம், முறையான அனுமதி பெற்றுள்ளனவா என்பதற்கான ஆவணங்கள் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள, தனியார் கல்வி நிறுவன வளாகங்களை ஆய்வு செய்ததில், ஏறத்தாழ, 500 கல்லூரிகளில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விதிமீறல்களின் பரப்பளவு, 75 லட்சம் சதுர அடியைத் தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நடவடிக்கைஇது தவிர, தமிழகம் முழுவதும், ஏறத்தாழ, 300 தனியார் பள்ளி வளாகங்களிலும், அனுமதியின்றி அடுக்கு மாடி கட்டடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி, 2007ம் ஆண்டுக்கு பின், கட்டப்பட்ட கட்டடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில், 500 கல்லூரிகளுக்கும், 200 பள்ளிகளுக்கும் நகரமைப்புத் துறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில், ஓரளவுக்கு விதிமீறல் உள்ள கட்டடங்களை வரன்முறை செய்வது குறித்தும், அரசு தரப்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகரப் பகுதிகளில் உள்ள, கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள, விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்தனர். முதல் கட்டமாக, 65 கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதன் பின், மேலும் பல கல்வி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 172 நிறுவனங்கள் இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகர் பகுதியில், 62 பொறியியல் கல்லூரிகள், 46 கலை, அறிவியல் கல்லூரிகள், 41 பாலிடெக்னிக் கல்லூரிகள், 23 கல்வியியல் கல்லூரிகள் என, மொத்தம் 172 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டன. நகரமைப்பு சட்டப் பிரிவுகள், 56, 57ன் கீழ், விளக்கம் மற்றும் திட்ட அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை, 15 நாட்களுக்குள் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு அனுப்ப வேண்டும் என, இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. பதில் இல்லை இதற்கு, இதுவரை, 30 சதவீதத்துக்கும் குறைவான நிறுவனங்களே பதில் அளித்துள்ளன. இந்த பதில்கள் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். பதில் அளிக்காத நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடிப்பதற்கான உத்தரவுகளை தனித்தனியாக பிறப்பிக்க, நகரமைப்பு சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த நிறுவனங்கள் மீது எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...