கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்...

 
மாபெரும் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்... அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார மந்தநிலையை சந்தித்தபொழுது அந்நாட்டின் ஜனாதிபதி ஆனார். எந்த கொண்டாட்டங்களும் இல்லாத நிலையில் பொறுப்பேற்றார் - மக்கள் முகங்களை பார்த்தார். அவர்களிடம் பக்கம் பக்கமாக பேசுவது உதவாது எனத் தெரியும், "நாம் பயங்கொள்ள வேண்டிய ஒரே விஷயம் பயம் மட்டுமே!"என்றார்.

நாட்டை கட்டமைக்க ஆரம்பித்தார். நியூ டீல் என தன் திட்டங்களுக்கு பெயர் கொடுத்தார் - சிக்கன நடவடிக்கைகள் எடுத்தார். நாட்டை படிப்படியாக மீட்டார். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து முடித்திருந்த அவர் உலகப் போரில் நேரடியாக பங்குகொள்ளாமல் ராஜதந்திரியாக நடந்து கொண்டார்.

நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களை மட்டும் லெண்ட் லீஸ் முறைப்படி தந்து கொண்டிருந்தார். 1941 இல் ஜப்பான் பியர்ல் ஹார்பரை தாக்கியது; அமெரிக்காவின் பெரும்பாலான ஆயுத பலம் போய் நாடே அவ்வளவு தான் என எல்லாரும் நினைத்தார்கள்; "இனி நாடு எழ முடியாது" என படைத்தளபதிகள் சொன்னார்கள். ரூஸ்வெல்ட் இருபதாண்டுகளுக்கு முன்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தவர். ஒரு ஒரு நிமிடம் எழுந்து நின்று, "என்னால் எழுந்து நிற்க முடியுமென்றால் இந்த தேசத்தாலும் முடியும்!"என்றார்.

உலகப்போரில் அவர் நாடு சொன்னபடியே வெற்றிகளை பெற்றது; ஆனால்,போரின் இறுதி கட்டத்தின்பொழுது அவரே இறந்து போனார் -அவர் இறந்த பொழுது ராணுவ வீரர்கள் அழக்கூடாது என்கிற விதியை மீறி கறுப்பின இசைக்கலைஞர் ஒருவர் கண்ணீர் வடிப்பதே நாட்டின் மனதை சொல்லியது. அவர் இருந்திருந்தால் ஜப்பானின் மீது அணுகுண்டு போடவே அனுமதித்திருக்க மாட்டார் என சொல்வோரும் உண்டு. தைரியம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என உலகுக்கு புரியும்படி தன் வாழ்வால் சொன்ன தன்னிகரற்ற தலைவன். அவர் பிறந்த தினம் இன்று (ஜன.30)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹. 2000/- Cash Reward to teachers and government employees who have served the government without any defect for 25 years - CEO Proceedings & Format

25 ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ₹. 2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அ...