எம்.பில்., முடித்த பட்டதாரி
ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், இளங்கலையுடன்
பி.எட்., பட்டம் பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம்
செய்யப்படுகின்றனர். பணியில் சேர்ந்த பின், முதுகலை மற்றும் எம்.எட்.,
படித்தால், இரு ஊக்க ஊதியம் பெற தகுதி பெறுவர்.ஆனால், முதுகலை பட்டம்
பெற்று, எம்.பில்.,-ஆய்வு படிப்பு, பட்டம் பெற்றால், ஒரு ஊக்க ஊதியம்
மட்டுமே வழங்கப்பட்டது.தமிழகத்தில் எம்.பில்., பட்டம் பெற்ற பட்டதாரி
ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கழகம் உட்பட, பல ஆசிரியர் சங்கங்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை
விடுத்து வந்தன.இந்நிலையில், எம்.பில்., முடித்தவர்களுக்கும், ஊக்க ஊதியம்
வழங்கப்படும் என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தற்போது
பணியில் சேரும் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடிப்படை -.9,300
ரூபாய், மற்றும் தர ஊதியத்தில் -.4,600 ரூபாயில், 6 சதவீதம் வரை ஊக்க
ஊதியம் வழங்கப்படும். குறைந்தது, ஒரு ஆசிரியரின் சம்பளம், 1500 ரூபாய் வரை
உயர வாய்ப்புள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக, மதுரை மாவட்ட செயலாளர்
முருகன் கூறுகையில், ""ஆசிரியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை, அரசு
தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம்
எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்,'' என்றார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
6-8ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க "திறன்" எனும் புதிய திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க "திறன்" எனும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறோம் - பள்ளிக் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.