கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கணக்கெடுப்பு பணி துவக்கம்...

 


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தடுப்பூசியை முன்களப் பணியாளர்களுக்கு செலுத்துவதற்கான கணக்கெடுப்பு பணியில்  சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் , அதில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்,  மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட  விவரங்களை,  சென்னை தேனாம்பேட்டை - DMS வளாகத்தில் இருந்து காணொலி மூலம் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் என 2 ஆயிரத்து 854 உள்ளன.

இது தவிர, 35 ஆயிரம், தனியார் மருத்துவ மனைகள், ஆய்வக்கூடம், தனியார் கிளினிக் உள்ளிட்டவைகளும் கணக்கெடுக்கப்பட உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆற்றுப் பாலத்தில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு

ஆற்றுப் பாலத்தில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு  பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தட...