கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தி மிரட்டி பணம் வசூலித்த சி.இ.ஓ - லஞ்ச ஒழிப்பு விசாரணையில் பரபரப்பு தகவல்...

 கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருப்பவர் உஷா. இவர் பள்ளிகளின் உரிமம் புதுப்பித்தலுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதைதொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிந்தது.

 இதையடுத்து அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், புத்தாண்டு பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-06-2025

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-06-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர...