கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்...


 பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்தையடுத்து கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு நடைபெறும் தேதி எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு பொதுதேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. 


 இதன்படி, வரும் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கும் பொதுத்தேர்வு 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 


 பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை. பொதுத்தேர்வு அட்டவணையை தயாராக வைத்திருந்தோம். தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்தே தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கூறியது பற்றிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Age Relaxation Format

 மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம் Application form for requesting age relaxation for students >>> தரவிறக்கம் செய்ய இங்கே ச...