கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊக்க ஊதியம் பெற மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்குமா ?

 10-03-2020க்கு முன்பாக ஊக்க ஊதியம் பெற துறை முன் அனுமதி பெற்று உயர்கல்வி முடித்து இருந்து பல்வேறு காரணங்களால் ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் திரட்டப்பட்டு நமது பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில்  மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு பூ.ந.நரேஷ் ஐயா அவர்கள் ஊக்க ஊதியம் சார்ந்து கூறும்போது...


 உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ள ஆசிரியர்களின் பெயர் பட்டியல் நிதித் துறையின் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.


இதில் பள்ளிக்கல்வி துறையின் வேலை நிறைவுபெற்றுவிட்டது. நிதித்துறைசார்ந்த முடிவு எடுப்பது அரசு மட்டுமே என்று கூறி உள்ளார்.


மேலும் அவர் கூறும்போது, மார்ச் 31 க்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைக்காவிட்டால் உயர்கல்வி படிப்புக்கு ஊக்க ஊதியம் பெற முடியாமல் போய்விடும் என்று ஆசிரியர்கள் அச்சப் பட வேண்டாம். அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...