கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் வகுப்பில் பங்கேற்ற ஆசிரியை கொரோனாவால் இறப்பு - தேர்தல் வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை...

 திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு மார்ச், 18ல் சின்னாளப்பட்டி தனியார் பள்ளியில் நடந்தது.


2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.மார்ச், 26ல் இதே ஆசிரியர்களை பிரித்து, மாவட்டத்தின் மற்ற, ஆறு தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இந்நிலையில், முதல் கட்ட வகுப்பில் பங்கேற்ற, 53 வயதுடைய, உதவி பெறும் பள்ளி ஆசிரியை ஒருவர், கொரோனா பாதிப்பால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவருடன் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, சான்று சமர்ப்பிக்கும்படி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலியான ஆசிரியை மார்ச், 5ல் பெங்களூரு சென்று வந்துள்ளார். 'மார்ச், 11ல் அரசு மருத்துவமனை பரிசோதனையில், 'நெகட்டிவ்' என வந்ததால், தேர்தல் வகுப்பில் பங்கேற்றுள்ளார்.'பாதிப்பு தொடர்ந்ததால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மார்ச், 25ல் நடந்த சோதனையில் கொரோனா உறுதியானது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Upgradation of 14 Middle Schools to High Schools - DSE Proceedings - Attachment: G.O. (Ms) No.: 193, Dated: 13-08-2025

 14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 19-08-2025 - இணைப்பு:  அரசாணை (நிலை...