இன்று முதல் இ-பாஸ் எல்லாம் தேவையில்லை - நியாயமான காரணங்களுக்கு இ-பதிவு போதும் - தமிழக அரசு விளக்கம் (நாளிதழ் செய்தி)...

அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்குள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு சான்றிதழ் போதும் என்றும், இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.



தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிதாக தமிழகத்திற்குள் இ-பதிவு அனுமதி தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதாவது, திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இ-பதிவு என்பது இ-பாஸ் என்று செய்தி பரவியதாகவும், அது தவறானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இ-பதிவு என்பது எங்கே போகிறோம் என்பதை காரணம் மற்றும் ஆவணத்துடன் பதிவு செய்து விட்டு சான்றிதழுடன் செல்வது. அதுவே இ-பாஸ் என்றால் விண்ணப்பித்துவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். எனவே இ-பாஸ் நடைமுறை இல்லை என்றும் இ-பதிவு போதுமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 14-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...