கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 20- க்குள் கொரானா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - CEO Proceedings...

 அனைத்து ஆசிரியர்களும் வரும் ஜூன் 20- க்குள் கொரானா வைரஸ் தடுப்புக்கான தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் - CEO Proceedings...


THIRUVALLUR CEO PROCEEDINGS 


திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் , அலுவலர்கள் / அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 20.06.2021 க்குள் கொரானா வைரஸ் தடுப்புக்காள தடுப்பூசி ( Vaccine ) கண்டிப்பாக போடப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு தடுப்பூசி ( Vaccine ) போடப்பட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சான்றிதழ் நகலை உரியவரிடமிருந்து பெற்று அந்தந்த ஒன்றியத்திற்குரிய அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் , போடாதவர்களுக்குரிய காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தகவல் குறித்து மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை மேற்கொண்டு இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 19.06.2021 க்குள் இவ்வலுவலக மின்ளஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET எழுத மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியவை

  ✍️✍️✍️✍️✍️✍️✍️  TNTET எழுத மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியவை ✳️Hall Ticket எடுத்துக்கொள்ளவும் தேதி பார்த்துக் கொள்ளவும் 5 ஆம் தேதிக்கு உள்...