கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் (Government Arts and Science Colleges) சேர நாளை (26-07-2021) முதல் ஆன்லைனில் (Online Apply) விண்ணப்பிக்கலாம்...

 


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை (26-07-2021) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...


தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு    நாளை முதல்  ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள்  சேர்க்கைகான விண்ணப்பங்களை   www.tngasa.in  என்கிற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். 


மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் போதுமான அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

பொதுப்பிரிவினர் 48 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் 2ரூபாய் பதிவு கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்தலாம்.


SC , ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.  பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும்  செலுத்த வேண்டும் 


 இணைய வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள்  மாவட்ட சேர்க்கை சேவை மையங்களில் The director directorate of collegiate education, chennai-6 என்கிற பெயரில்   நேரடியாகவும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு இ சேவை மையத்தின் மூலமும் விண்ணப்பம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.


மேலும் விபரங்களுக்கு கல்லூரிக்கல்வி இயக்கத்தின் 044-28260098, 28271911 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...