கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வி – உயர்நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை சீரமைக்க ஆணை பிறப்பித்தல் – அத்தொகையின் செலவினம் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 035296/என்2/இ1/2021, நாள்: 09-08-2021 (Penalty / Contribution Received by High Court Order - Issuing Order to Reorganize Government Primary / Middle / High / Higher Secondary Schools - Proceedings of the Commissioner of School Education advising all Chief Educational Officers on the expenditure of that amount)...

 


பல்வேறு குற்ற / பிற வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆணைகளில் பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் வங்கிக் கணக்கிற்கு மனுதாரர்களின் அபராத / பங்களிப்பு தொகை செலுத்த ஆணைகள் வழங்கப்பட்டு மேற்சொன்ன தொகைகள் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டு கீழ்காணுமாறு அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மிக மிக அவசியமான பணிகளுக்கு செலவிட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 


மிகவும் பழுதடைந்த அல்லது பெண்கள் கழிப்பிடம் இல்லாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 


கழிவறைகளை சீர்படுத்த மற்றும் தூய்மை படுத்த முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.


• இன்றியமையாத குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.


• கழிவுநீர் இணைப்பு சரிசெய்தல் , மிக குறைந்த செலவினம் உள்ள மின்சாரம் , கட்டடம் , வளாக தூய்மைப்பணிகள் மற்றும் சுற்றுச்சுவர்களின் ஏற்படும் பழுது மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.



>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 035296/என்2/இ1/2021, நாள்: 09-08-2021...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்க...