கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கம் - அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021 வெளியீடு - இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பாபிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. நியமனம் (Creation of a new department called "Chief Minister's Address")...

 


"முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கம் - அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021 வெளியீடு - இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பாபிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. நியமனம் (Creation of a new department called "Chief Minister's Address")...


>>> அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021...



முதல்வரின் குறைதீா்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ’முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.


இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு(IIPGCMS), உங்கள் தொகுதியில் முதல்வா் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும்.


இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS இடைக்கால நிவாரணம் ரூ.10000 மட்டுமே - கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

 18 ஆண்டுகள் பணியாற்றினால் தான் 50% ஓய்வூதியம் என்று ஆசிரியர்களை ஏமாற்றுவதா? - ஆசிரியர் சங்கம் கண்டனம் TAPS இடைக்கால நிவாரணம்  ரூ.10000 மட்ட...