கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை 01.03.2024 முதல் அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024...

 

அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை 01.03.2024 முதல் அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6,

ந.க.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌. 01.03.2024


பொருள்‌: தொடக்கக்‌ கல்வி- 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டு மாணவர்‌ சேர்க்கை - 01.03.2024 முதல்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறுதல்‌ - அங்கன்வாடி மையங்களில்‌ பயிலும்‌ குழந்தைகளில்‌ 5+ வயதினை நிறைவு செய்யும்‌ குழந்தைகளை அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்தல்‌ - சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக

பார்வை: 1. சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌,

ந.௧.எண்‌.079119/எம்‌/இ1/2023, நாள்‌.26.02.2024.

2. சென்னை - 6, தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, நக.எண்‌. 003845 / ஜெ2 / 2024, நாள்‌.29.02.2024


பார்வை (1)ல்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வியாண்டில்‌, தமிழ்நாடு அரசு பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கைப்‌ பணிகளை 01.03.2024 முதல்‌ தொடங்கிட விரிவான அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.


பார்வை (2ல்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில் மேற்படி மாணவர் சேர்க்கை பணிகளுக்கான விழிப்புணர்வு சேர்க்கைப் பேரணி நடத்தும்போது ஏற்படும்‌ செலவினங்களுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்ககத்தில்‌ இருந்து ஒவ்வவாரு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிக்கும்‌ SNA A/c ல்‌ ரூ.2,000/- நிதி விடுவிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சீரிய முயற்சியால்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித்‌ தரம்‌ உயரும்‌ பொருட்டு பல்வேறு முன்னோடித்‌ திட்டங்கள்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


வரும்‌ கல்வி ஆண்டில்‌ அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ திறன் வகுப்பறைகள்‌ (Smart Class Rooms), அனைத்து அரசு நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ உயர்‌ கொழில்‌ நுட்ப கணிணி ஆய்வகங்கள்‌ (Hi-Tech Labs) அதற்குத்‌ தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன்‌ அமைக்கப்பட உள்ளன. மேலும்‌, அரசுப்‌ பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக்‌ கணினியும்‌ (TAB) வழங்கப்பட உள்ளது.


அரசுப்‌ பள்ளிகளில்‌ 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மாணவர்‌ சேர்க்கையை சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை நடுநிலைப்‌ பள்ளியில்‌ 01.03.2024 அன்று மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்துள்ளார்கள்‌.


பள்ளிகள்‌ அமைந்துள்ள குடியிருப்புப்‌ பகுதிகளில்‌ (Habitation and Catchment Area) இருந்து 5+ வயதுடைய குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்கை செய்வதற்கும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ கிடைக்கும்‌ கற்றல்‌ வாய்ப்புகள்‌, பல்வேறு நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவித்தொகை குறித்தும் அறியும் வகையில்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தினை அனைத்து பொது மக்கள்‌ மற்றும்‌ அனைத்து பள்ளி வயது குழந்தைகளின்‌ பெற்றோர்கள்‌ மத்தியில்‌ ஏற்படுத்தித்‌ தேவையான நடவடிக்கைகளை பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ இருபால்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்வதற்கு உரிய அறிவுரைகளை வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலமாக வழங்கிட அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களும்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்கொள்ளப்‌படுகிறார்கள்‌.


தமிழ்நாட்டில்‌ பெரும்பான்மையான அரசுப்‌ பள்ளிகள்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ தான்‌ அமைந்து உள்ளது. ஊரகப்‌ பகுதிகளில்‌ அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில்‌ 3 முதல்‌ 5 வயதுடைய குழந்தைகள்‌ பள்ளி முன்பருவக்‌ கல்வியைக்‌ கற்று வருகின்றனர்‌. இம்மையங்களில்‌ முன்பருவக்‌ கல்வியை நிறைவு செய்யும்‌ 5+ வயதுடைய குழந்தைகளின்‌ எண்ணிக்கை விவரம்‌ RevenueDistrict / Project-ன்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்‌ இயக்ககத்தில்‌ இருந்து பின்வருமாறு பெறப்பட்டு உள்ளது. (மையங்கள் வாரியாக 5+ வயதுடைய மாணவர்‌ எண்ணிக்கை மாவட்டவாரியாக இணைப்பில்‌ கண்டுள்ளபடி இணைக்கப்பட்டு உள்ளது).



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...