கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"பொறுமை'' - விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் ஒரு நாள்...



"பொறுமை'' - விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் ஒரு நாள்...

...........................................


‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.


எது நடந்தாலும், என்ன நடந்தாலும் அவைகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே ‘பொறுமை’ 


எதற்கும் உணர்ச்சி வசப்படாத தன்மையே ‘பொறுமை’  எதையும் சகித்துக் கொண்டு போவோர் பொறுமையாக இருக்க முடியும்.


விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பைக் கண்டு பிடித்தார்.


ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது.


அப்போது எடிசன் எப்படி நொந்து போய் இருப்பார்...?

அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சம்பவம்...


தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.


எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்குக் கொண்டு வரச் சொன்னார்.


பல்பைக் கொண்டு வரும் போது, அது கை தவறி விழுந்து உடைந்து விட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.


ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. 


சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார்.

அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் சொன்னார்.


பல்பைக் கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டு விட்டனர்.


அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்து கொள்ள முடிந்தது. 


ஆனால் அவரது மனதைக் காயப்படுத்தி விட்டால் அதை என்னால் சரி செய்து கொடுத்து விட முடியுமா?


மீண்டும் அவனிடமே பணியைக் கொடுத்தால் அவன் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவான். அதனால் தான் அப்படி செய்தேன்’ என்றார்.


எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த பொறுமை உணர்ச்சியின் எல்லையை அப்போது தான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்!


*ஆம்.,தோழர்களே..,*


*ஒருவனுடைய திறமைகளை* *வெற்றிகளாக*

*உருமாற்றித் தருவது* *பொறுமையே !* 


*பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு !* 


*அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும்*

*துடுப்பாய்ப் பயன் தரும் !✍🏼🌹*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு & Press Release

  TET Judgement: TN Govt has Decided to file Review Petition in Supreme Court  TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு...