கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மற்றவர்களுக்கு நல்லது நினைக்கும் பொழுது எல்லாம் உங்களுக்கும் நல்லதே நடக்கும் - இன்றைய சிறுகதை



Whenever you wish others well, good things happen to you too – Today's Short Story


 மற்றவர்களுக்கு நல்லது நினைக்கும் பொழுது எல்லாம் உங்களுக்கும் நல்லதே நடக்கும் - இன்று ஒரு சிறு கதை


ஒரு சீன நாட்டு தத்துவக் கதை...


ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். 

ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. 

அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை. 


அப்பா மகனிடம் சொன்னார். 

உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். 


மகன் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டான். 

அவனுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக அவனை அவனே பாராட்டிக் கொண்டான்.


அப்பா சாப்பிட ஆரம்பித்த போது மகனுக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். 

அவசரப்பட்டு தான் எடுத்த முடிவுக்காக வருத்தப்பட்டான். 


அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். 

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.


அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. 


அப்பா  சொன்னார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்..’

இந்த முறை அவன் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தான். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டான். 

அன்றைக்கும்  ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை.


அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.

`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.


மூன்றாவது நாள். 

மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை... மற்றொன்றில் இல்லை.

அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னான்.

`அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ 


அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். அவன் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தான். 


அன்றைக்கும் அவனுக்கு ஆச்சரியம்.  கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன.


அப்பா அவனைப் பார்த்துச் சொன்னார்.

நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!


எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்.


பொறுமையும் பொறுப்பும் - இன்றைய சிறுகதை

 

 Today's Short Story 


தினம் ஒரு திருக்குறள் கதை


இன்று ஒரு சிறு கதை - பொறுமையும் பொறுப்பும்


பொறையுடைமை, குறள்.154


தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், புகழ்பெற்ற அறிவியலறிஞர். இவர், பல முறை தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.


நண்பர்களுக்கும், மற்ற அறிவியலறிஞர்களுக்கும் தம் கண்டுபிடிப்பைச் செய்துகாட்ட எடிசன் விரும்பினார்.


அதற்காக, நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்தார். அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.


எடிசன் தம் உதவியாளரை அழைத்து மின் விளக்கை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னார்.


உதவியாளர், அதனைக் கொண்டு வரும்போது, திடீரெனக் கைதவறி விழுந்தது. ஆயினும், சற்றும் மனம் கலங்காத எடிசன், உடனே மற்றொரு மின் விளக்கை உருவாக்கினார்.


அதனை மீண்டும் அதே உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் செய்தார்.


"மின் விளக்கைக் கீழே போட்டு உடைத்தவரிடம் மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? 'என்று சிலர் எடிசனிடம் கேட்டனர்.


அதற்கு எடிசன், உடைந்த பொருளை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தது. ஆனால், உதவியாளரின் மனத்தைக் காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா?


அதுமட்டுமன்று, மீண்டும் அதே பணியை அவரிடமே கொடுக்கும்போது, தமது பொறுப்பை உணர்ந்து கவனமுடன் பணிபுரிவார். அதனால்தான் அப்படிச் செய்தேன்" என்றார்.


எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமைக் குணத்தை, அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்.


*குறள்*


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை

போற்றி ஒழுகப் படும்.


*விளக்கம்*


நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


எளிய மனிதர்களின் வேண்டுதல் - இன்று ஒரு சிறு கதை



The Prayer of Simple People - Today's Short Story


எளிய மனிதர்களின் வேண்டுதல் - இன்றைய சிறுகதை


 ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.


அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்கவோ  நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது.. அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.

அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர். அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையின்படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.


பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல்படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான். தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.


முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான். ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....


இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.


முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிர்ஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்...


எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,

தன் நண்பன் ஒன்றுக்கும் உதவாதவன். கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை. ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்கவில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதனால், அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..


படிக்கும் நமெக்கெல்லாம் கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா... அப்போது அந்த படகு கிளம்பத் தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது... "ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..?" என்று அந்த குரல் கேட்டது...


அதற்கு அந்த மனிதன் சொன்னான் "நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்த்தனை ஒன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஒன்று கூட பெற தகுதி இல்லாதவன்" என்று சொன்னான்.


அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது "மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்... உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்திருக்காது".


"அவன் என்ன கேட்டான் பிரார்த்தனையில்? அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா?" என்றான்..?


அந்த குரல் மேலும், "உன் நண்பன் பிரார்த்தனையில் 'என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன். வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்...

அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல.... ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்றுதான் வேண்டினான்".


அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்..


#கதையின்_நீதி:


நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட வேண்டாம், சந்தேகப்பட வேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்..


கருணை உள்ளம் - இன்று ஒரு சிறு கதை

 

 

கருணை உள்ளம் - இன்றைய சிறுகதை - Today's Short Story 


கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.


(பொருள்: கண்ணோட்டம் என்னும் சிறந்த இரக்கப் பண்பு இருப்பதால் தான் இந்த உலகம் அழியாமல் நிலைபெற்றுள்ளது.)


நான் Uber ஓட்டுகிறேன். பெரும்பாலும் இரவு டியூட்டி. கடந்த வாரம் இரவு 11 மணிக்கு ஒரு முதியவரை எடுத்தேன். அவர் காரில் ஏறி,


“இன்றிரவு என்னை ஐந்து இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நான் உங்களுக்கு $500 தருகிறேன். காசாக. ஆனால் முடியும் வரை ஏன் என்று கேட்கக்கூடாது,” என்றார்.


ஐந்து முகவரிகள் கொடுத்தார்.


முதல் இடம்: புறநகர் பகுதியில் ஒரு வீடு.

அவர் காரிலேயே இருந்தார். அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டே பத்து நிமிடம். அமைதியாக அழுதார்.

“சரி. அடுத்தது.” நான் ஓட்டினேன்.


இரண்டாம் இடம்: ஒரு ஆரம்பப் பள்ளி.

வெறிச்சோடியது. இருள். அவர் இறங்கி விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். ஒரு ஊஞ்சலில் அமர்ந்தார். இருபது நிமிடம் இருந்தார். திரும்பி வந்தார்.

“நான் இங்கே 43 ஆண்டுகள் கற்பித்தேன். என் வாழ்க்கையின் சிறந்த வேலை.”


மூன்றாம் இடம்: ஒரு டைனர் (சிறிய உணவகம்).

அவர் உள்ளே சென்றார். காபி ஆர்டர் செய்தார். ஒரு மேசையில் தனியாக அமர்ந்தார். குடிக்கவே இல்லை. சுற்றி பார்த்துக்கொண்டே இருந்தார். பதினைந்து நிமிடம். திரும்பி வந்தார்.


“என் மனைவியும் நானும் முதல் டேட்டுக்கு வந்த இடம் இது. 1967.”


நான்காம் இடம்: கல்லறை.

அவர் இறங்கி ஒரு கல்லறைக்கு சென்றார். அதற்குப் பக்கத்தில் நின்று பேசினார். என்ன சொன்னார் என கேட்க முடியவில்லை. முப்பது நிமிடம். திரும்பி வந்தபோது கண்கள் சிவந்திருந்தன.

“என் மனைவி. இன்று மூன்று ஆண்டுகள்.”


ஐந்தாம் இடம்: மருத்துவமனை.

“இது கடைசி,” என்றார். காரை நிறுத்தச் சொன்னார்.


“இப்போது நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா? எனக்கு நான்காம் நிலை புற்றுநோய். இன்னும் சில வாரங்கள். ஒருவேளை சில நாட்கள். இன்று இரவு என் வாழ்க்கையை முழுவதும் இன்னொரு முறை பார்க்க நினைத்தேன். முடியாத முன்.”


அங்கேயே நான் அழ ஆரம்பித்தேன்.


“அந்த வீடு – என் குழந்தைகளை வளர்த்த இடம்.

அந்த பள்ளி – என் வாழ்க்கையின் நோக்கத்தை கண்ட இடம்.

அந்த டைனர் – நான் காதலித்த இடம்.

அந்த கல்லறை – நான் விடைபெற்ற இடம்.


இங்கே இந்த மருத்துவமனை – இன்று நான் சேரப் போகும் இடம். ஹாஸ்பிஸ் வார்டு. நான் வீட்டுக்கு திரும்ப மாட்டேன்.”


அவர் $500 கொடுத்தார்.

“என் வாழ்க்கை முழுவதையும் என்னை ஓட்டி காட்டியதற்கு நன்றி. என்னிடம் இனிமையாக நடக்கும் கடைசி அந்நியர் நீங்கதான்.”


நான் பணத்தை மறுத்தேன்.

“இதை நான் எடுக்க முடியாது.”


அவர் வற்புறுத்தினார்.


“தயவு செய்து. இதை யாருக்கும் விட முடியாது. என் குழந்தைகள் என்னுடன் பேசுவதில்லை. நண்பர்கள் யாரும் இல்லை. நீங்க எனக்கு மூன்று மணி நேர அன்பு கொடுத்தீர்கள். அது $500-ஐ விட பெரியது.”


அவர் இறங்கினார். சிறிய சூட்கேஸ் எடுத்தார்.

“உங்க பெயர் என்ன?”

“மார்கஸ்.”

“நன்றி மார்கஸ். என் வாழ்க்கையின் கடைசி நல்ல விஷயம் நீங்கதான்.”


அவர் மருத்துவமனைக்குள் நடந்துசென்றார்.

நான் காரில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் அழுதேன்.


அவரை மறக்க முடியவில்லை. மறுநாள் திரும்பிப் போனேன்.

“மிஸ்டர் பட்டர்சன். ரூம் 412.”

மலர்கள் எடுத்துச் சென்றேன். கதவைத் தட்டினேன்.

அவர் படுக்கையில் இருந்தார். என்னைக் கண்டு சிரித்தார்.

“மார்கஸ்… நீங்க வந்துட்டீங்க.”


“அப்படியே விட்டுவிட முடியவில்லை. நீங்கள் சுகமா?”

“இறக்கிறேன். ஆனால் நேற்று என் வாழ்க்கையை பார்த்துவிட்டேன். அதனால்… நான் நன்றாக இருக்கிறேன்.”


நாங்கள் இரண்டு மணி நேரம் பேசினோம்.

அவரது மனைவி. மாணவர்கள். பேசாமல் போன குழந்தைகள். வாழ்க்கை.


இரண்டு வாரங்கள் தினமும் அவரைச் சந்தித்தேன். காபி கொண்டு சென்றேன். செய்தி வாசித்தேன். சில சமயம் அமைதியாக இருந்தோம்.


“நான் தனியாக இறப்பேன் என்று நினைத்தேன்,” என்றார் ஒரு நாள்.

“ஆனால் நீங்க இருக்கிறீர்கள். ஒரு அந்நியர் குடும்பமாக மாறினார். அது ஒரு பரிசு.”


நான் அவரது கையை பிடித்தேன்.

“நீங்கள் இனி தனியாக இல்லை.”


அவர் அழுதார்.

“நன்றி. நான் தெரியாமல் போன நேரத்தில் என்னை பார்த்ததற்கு.”


செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:17.

மிஸ்டர் பட்டர்சன் இறந்தார்.

நான் அங்கே இருந்தேன். அவரது கையை பிடித்தபடி.


அவரது கடைசி வார்த்தைகள்:


“மக்களிடம் சொல்லுங்கள். அந்நியர்களை உண்மையாகப் பாருங்கள். எல்லோரும் இறக்கிறார்கள். சிலர் வேகமாக. ஆனால் நாமெல்லாம் ஒரு பயணத்தில் இருக்கிறோம். அந்த வழியில் கருணையாய் இருங்கள். நீங்கள் கருணையாய் இருந்தீர்கள். என் கடைசி நாட்களை அழகாக்கினீர்கள்.”


அவர் கண்களை மூடியார்.

இதய மானிட்டர் நேர்கோடு.


அவரது இறுதிச்சடங்கில் ஆறு பேர் மட்டும்.

நான். மூன்று நர்ஸ்கள். ஒரு வக்கீல். ஒரு பழைய மாணவர்.


நான் பேசினேன்:

“ஒவ்வொரு அந்நியரும் ஒருவரின் முழு உலகம்.

ஒவ்வொரு பயணிக்கும் ஒரு கதை இருக்கிறது.


ஒவ்வொரு மனிதரும் யாராவது தங்களை கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவர் எனக்கு $500 கொடுத்து தனது வாழ்க்கையை ஓட்டச் சொன்னார்.

ஆனால் அதைவிட பெரிய ஒன்றை தந்தார் – அந்நியரிடம் கருணை காட்டுவது கூடுதல் விஷயம் அல்ல. அதுவே எல்லாம்.”


அந்த $500 இன்னும் என் காரில் இருக்கிறது.

செலவிடவில்லை. நினைவாக வைத்திருக்கிறேன்.


ஒவ்வொரு பயணியும் கடைசி பயணமாக இருக்கலாம்.

ஒவ்வொரு அந்நியரும் கடைசி விடைபெறலாம்.


அதனால் நான் இப்போது வேறுபட்டபடி ஓட்டுகிறேன்.

கேட்கிறேன். கேட்கிறேன். பார்க்கிறேன்.


ஒரு முதியவர்…

ஒரு மென்மையான கடைசி இரவு…

ஒரு அந்நியர் தங்கியிருந்ததால்.


அந்த அந்நியராக நீங்களும் இருங்கள்.

இன்று யாரோ ஒருவரின் கடைசி பயணம் இருக்கலாம்.

அதை மென்மையாக்குங்கள்


“அமைதியான தருணங்கள்… ஆனால் சத்தமான உண்மைகள்.”

முன்னோக்கி அனுப்பப்பட்ட பதிவு — பகிர வேண்டிய மதிப்பு உள்ளது.

🙏🙏💖🙏🙏🙏🙏🙏


அன்பு என்பது என்ன? - இன்றைய சிறுகதை



 அன்பு என்பது என்ன? - இன்று ஒரு சிறு கதை


ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார்.


திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் மலர் இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு சிறு பறவை இருந்தது. நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியையிடம் "நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை" என்று கேட்டார.


அதற்கு அந்த மாணவி, "நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப்பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்" என்று பதில் கூறினாள்.


மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார்.


"அன்பு என்றால் இது தான். ஒன்றும் கொடுக்க வேண்டாம். எதையும் பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்" என்றார்.



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 

ஆழம் அறியாமல் காலை விடாதே : இன்று ஒரு சிறு கதை



ஆழம் அறியாமல் காலை விடாதே : இன்று ஒரு சிறு கதை 


Look before you leap


இன்றைய சிறுகதை (Today's Short Story)


ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவர், விமான ஓட்டியின் அறையை (Cockpit) சுத்தம் செய்யும்போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டார்.


அவர் அந்த புத்தகத்தை பிரித்தார். முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் 🔴 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவர் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினார், இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !


அவருக்கு ஒரே குஷியாகி விட்டது.


இரண்டாவது பக்கத்தை புரட்டினார். "விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற 🔵 பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவரும் அப்படியே செய்தார். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓட துவங்கியது.


இப்போது அவருக்கு பறக்கும் ஆசை வந்தது. மூன்றாவது பக்கத்தை பிரித்தார். "விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் 🟢 பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.


அவரும் பச்சை கலர் பட்டனை அழுத்தினார். விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது. அவரும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தார்.


அவர் மிகவும் திருப்தி அடைந்தவராக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தார்.


அவ்வளவுதான், அவருக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.


காரணம், 4வது பக்கத்தில் எழுதி இருந்தது, "விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்பதை கற்றுக்கொள்ள இந்த புத்தகத்தின் இரண்டாவது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடையில் வாங்கி படியுங்கள்"!!!!


நீதி:


ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் இறங்காதீர்கள்.


சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள் 🙏

10 ரூபாய்க்கு 13 லட்சம் - நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்



10 ரூபாய்க்கு 13 லட்சம் - நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய் - இன்றைய சிறுகதை (Today's Short Story)


இன்று ஒரு சிறு கதை 


ஒரு கடைக்காரர் தனது கடையைத் திறந்தபோது ஒரு பெண் வந்து, "ஐயா, இதோ உங்கள் 10 ரூபாய்" என்றார். 


கடைக்காரர் அந்த ஏழைப் பெண்ணை கேள்விக் கண்களுடன், "நான் எப்போது உங்களுக்கு 10 ரூபாய் கொடுத்தேன்?" என்று கேட்பது போல் பார்த்தார். 😳


அந்தப் பெண், "நேற்று மாலை நான் சில பொருட்களை வாங்கினேன். நான் உங்களுக்கு ₹100 கொடுத்தேன், ₹70 மதிப்புள்ள பொருட்களை வாங்கினேன், நீங்கள் ₹30க்கு பதிலாக ₹40 திருப்பிக் கொடுத்தீர்கள்" என்று பதிலளித்தார். 


கடைக்காரர் 10 ரூபாயை நெற்றியில் தொட்டு, பணப் பெட்டியில் வைத்து, “ஒரு விஷயம் சொல்லுங்க அக்கா. நீங்க பொருட்களை வாங்கும்போது நிறைய பேரம் பேசினீங்க, ₹5க்கு கூட. இப்போ ₹10 திருப்பிக் கொடுக்க வந்திருக்கீங்களா?” என்று கேட்டார். 🤔


அந்தப் பெண், “பேரம் பேசுவது என் உரிமை. ஆனால் விலை நிர்ணயிக்கப்பட்ட பின்னர், குறைவாகக் கொடுப்பது பாவம்” என்றார். 😳


கடைக்காரர், “ஆனால் நீங்கள் குறைவாகக் கொடுக்கவில்லை. நீங்கள் முழுத் தொகையையும் செலுத்தினீர்கள். இந்த ₹10 என் தவறுதலாக உங்களிடம் வந்துவிட்டது. நீங்கள் அதை வைத்திருந்தால், அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்காது.


அந்தப் பெண், “அது உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது என் மனசாட்சியைப் பாதிக்கும். உன் பணத்தை நான் தெரிஞ்சுதான் வச்சிருக்கேன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் நேத்து ராத்திரி நான் அதைத் திருப்பிக் கொடுக்க வந்தேன், ஆனா உங்கள் கடை மூடி இருந்தது.” 😳


கடைக்காரர் ஆச்சரியமாக் கேட்டார், “நீங்க எங்க வசிக்கிறீங்க?” அந்த பெண், “கண்ணனூர்”னு பதில் சொன்னார். 😳


கடைக்காரரின்  “நீங்க ₹10 திருப்பிக் கொடுக்க 7 கிலோமீட்டர் தூரம் வந்தீங்க, இது உங்க இரண்டாவது வருகையா?” 😳


அந்தப் பெண் அமைதியாக, “ஆமாம், இது என் இரண்டாவது வருகை. மன அமைதி வேணும்னா, நாம் இது மாதிரி விஷயங்களைச் செய்யணும். என் கணவர் இப்போ இந்த உலகத்துல இல்லை, ஆனா அவர் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்தாரு: ‘வேற ஒருத்தருக்குச் சொந்தமான ஒரு பைசா கூட எடுக்காதீங்க.’ 🤫


ஏனென்றால் ஒருவர் அமைதியாக இருக்கலாம், ஆனால் மேலே இருப்பவர் எப்போது வேண்டுமானாலும் கணக்கு கேட்கலாம். அந்தக் கணக்கிற்கான தண்டனை என் குழந்தைகள் மீது விழக்கூடும்.” 😳


இதைச் சொல்லிவிட்டு அந்தப் பெண் அங்கிருந்து வெளியேறினார்.


கடைக்காரர் உடனடியாக பணப் பெட்டியிலிருந்து ₹300 எடுத்து, தனது ஸ்கூட்டரில் ஏறி, தனது உதவியாளரிடம், “கடையைப் பார்த்துக்கொள். நான் விரைவில் திரும்பி வருவேன்” என்றார்.


அவர் சந்தையில் உள்ள மற்றொரு கடைக்குச் சென்று பிரகாஷ் என்ற கடைக்காரரிடம் ₹300 கொடுத்தார். “இதோ, உன் ₹300 ஐ எடுத்துக்கொள். நேற்று, நீ பொருட்கள் வாங்க வந்தபோது, ​​நான் உன்னிடம் அதிக கட்டணம் வசூலித்தேன்.” 😳


பிரகாஷ் சிரித்துக் கொண்டே, “நீ அதிக கட்டணம் வசூலித்திருந்தால், நான் திரும்ப பொருள் வாங்க வரும்போது அதைத் திருப்பிக் கொடுத்திருக்கலாம். ஏன் இவ்வளவு அதிகாலையில் வந்தாய்?” என்றார்.


கடைக்காரர் பதிலளித்தார், "நீ திரும்பி வருவதற்குள் நான் இறந்துவிட்டால் என்ன செய்வது? நான் உனக்கு ₹300 கடன் பட்டிருக்கிறேன் என்பது கூட உனக்குத் தெரியாது. அதனால்தான் நான் அதைத் திருப்பித் தர வேண்டியிருந்தது. மேலே உள்ளவர் எப்போது கணக்கு கேட்பார் என்று யாருக்குத் தெரியும்? தண்டனை என் குழந்தைகள் மீது வரக்கூடும்." 😳


கடைக்காரர் வெளியேறினார், ஆனால் பிரகாஷ் மிகவும் வருத்தப்பட்டார்.


பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு நண்பரிடமிருந்து ₹3 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் மறுநாளே, நண்பர் இறந்துவிட்டார். 😳


நண்பனின் குடும்பத்தினருக்குப் பணம் பற்றித் தெரியாது, அதனால் யாரும் அதைக் கேட்கவில்லை. பேராசையால் தூண்டப்பட்ட பிரகாஷ், அதைத் திருப்பித் தர ஒருபோதும் முன்முயற்சி எடுக்கவில்லை.


இன்று, அந்த நண்பரின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவரது விதவை மனைவி தனது குழந்தைகளை வளர்க்க பல கூலி வேலைகளை செய்தார். ஆனாலும் பிரகாஷ் அந்த பணத்தை வைத்திருந்தார். 😳


கடைக்காரரின் வார்த்தைகள் - "மேலே உள்ளவர் எப்போது கணக்கு கேட்பார் என்று யாருக்குத் தெரியும்? என் குழந்தைகள் மீது தண்டனை வரக்கூடும்" - பிரகாஷை வேட்டையாடியது. 😳


இரண்டு அல்லது மூன்று நாட்கள் மனக் கொந்தளிப்புக்குப் பிறகு, அவரது மனசாட்சி விழித்துக் கொண்டது. அவர் வங்கியில் இருந்து ₹13 லட்சத்தை எடுத்துக்கொண்டு 10 ஆண்டுகளுக்கு முன் பணம் கொடுத்த தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.


நண்பரின் விதவை மனைவி வீட்டில், தனது குழந்தைகளுடன் இருந்தார். பிரகாஷ் அவரது காலில் விழுந்தார். ஒவ்வொரு ரூபாய்க்கும் போராடும் ஒரு பெண்ணுக்கு, ₹13 லட்சங்கள் ஒரு பெரிய தொகை. அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. பிரகாஷின் நேர்மைக்காக அவள் ஆசீர்வதித்தாள். 🙏


😳🤫 கடைக்காரரிடம் ₹10 திருப்பித் தர இரண்டு முறை சென்ற அந்த பெண் அவள்தான். 😳🤫


கடின உழைப்பாலும் நேர்மையாலும் வாழ்பவர்கள் கடவுளால் சோதிக்கப்படுகிறார்கள், ஆனால் இறைவன் அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை.



நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய் (As you sow, so you reap)

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான போராட்டம் - இன்றைய சிறுகதை



Today's Short Story 


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான போராட்டம் - இன்று ஒரு சிறு கதை 


ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.


ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.


அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.


இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேற.


திடீரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.


இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார்.


வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னதும், முதலாளியம்மா ‘ஓ’ என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கூறினான்..


அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.


நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏறெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.


அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல.


ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் “எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.


நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். அடுத்தவரது

நடவடிகைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல்.


இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்;


01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.


02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள் 🙏


10 ரூபாய்க்காக 86,390 ரூபாய்களை இழக்கலாமா? - இன்று ஒரு சிறு கதை

 

 10 ரூபாய்க்காக 86,390 ரூபாய்களை இழக்கலாமா? - இன்றைய சிறுகதை - Today's Short Story 


ஒரு முறை ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டார்:


உங்களிடம் 86,400 ரூபாய்கள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 ரூபாய்களை பறித்துக்கொண்டு ஓடினால், உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 ரூபாய்களை விட்டுவிட்டு அந்த 10 ரூபாய்களை பிடிக்க ஓடுவீர்களா? அல்லது பரவாயில்லை என்று உங்கள் வழியில் செல்வீர்களா?


அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் : நிச்சயமாக நாங்கள் 10 ரூபாய்களை விட்டுவிடுவோம். அந்த 86,390 ரூபாய்களைதான் பாதுகாப்போம் ' என்று பதிலளித்தனர்.


ஆசிரியர் சொன்னார்: உண்மையில், பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர். அந்த 10 ரூபாய்களுக்காக அவர்கள் அந்த 86,390 ரூபாய்களையும் இழக்கின்றனர். 


அதற்கு மாணவர்கள் : யாராவது அப்படி செய்வார்களா?!  எப்படி அது? என்று கேட்டனர். 


அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400  என்பது ஒரு நாளில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கை. யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக நாள் முழுதும் யோசித்து எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள் வீணாக்கி விடுவீர்கள், என்றார்.


ஆதலால் எரிச்சலூட்டும் ஒரு  வார்த்தைக்காக, அல்லது எதிர்மறையான ஒரு நிகழ்வுக்காக உங்கள் ஆற்றல்களையும், சிந்தனைகளையும் எஞ்சிய நேரங்களையும் வீணாக்கி விடாதீர்கள்.


ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார் : பொய்மையும் வாய்மையிடத்து

 

ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார் : பொய்மையும் வாய்மையிடத்து


திருக்குறள் கதைகள், இன்று ஒரு சிறு கதை, இன்றைய சிறுகதை, Today's Short Story


புறநகர் பகுதி ஒன்றில் இருந்த வீட்டில் ஒரு முதிய தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் வீட்டை சுற்றி அடிக்கடி அன்னியர் நடமாட்டம் இருப்பதை கவனித்து இருவரும் தனியாக இருப்பதால் அவர்கள் மிகவும் கவலை கொண்டனர். ஒருநாள் இரவு நேரத்தில் அவர்கள் வீட்டு தோட்டத்தில் திருடர்கள் சிலர் பதுங்கி இருப்பதையும் கண்டனர். உடனடியாக காவல் நிலையத்துக்கு போன் செய்து சந்தேகத்துக்கிடமான நபர்கள் தங்கள் வீட்டு தோட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும் தங்களது உடைமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை எனவும் புகார் அளித்தனர். 


அப்போது காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லை என்றும் தங்களால் இப்போது வர முடியாது என்றும் பதிலளித்தனர். 

அதற்குள் விடிந்து விட்டதால் அந்த மர்ம நபர்கள் போய்விட்டனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் இரவு அதே போல முதிய தம்பதியினர்  வீட்டிற்குள் நுழைவதற்கு தருணம் பார்த்து வீட்டை சுற்றி பதுங்கி இருந்தனர்.


இம்முறை காவல் நிலையத்துக்கு போன் செய்த முதிய தம்பதி ஐயா, இன்றும் அதே திருடர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள் ஆனால் நீங்கள் வரவேண்டாம், எங்கள் வீட்டைச் சுற்றி பதுங்கி இருந்த திருடர்களை நாங்கள் கொன்று விட்டோம் என்று கூறி போனை வைத்து விட்டனர்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் காவலர்கள் பெரும் படையுடன் முதியவர்களின் இல்லத்துக்கு வந்தனர். பதுங்கி இருந்த திருடர்களைக் கைது செய்துவிட்டு ஏன் கொலை செய்ததாக பொய் சொன்னீர்கள் என்று முதிய தம்பதியிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் நீங்களும் தான் உங்கள் காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லை என்று பொய் சொன்னீர்கள் என்று கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தார்கள் காவலர்கள்.


குறள்: 

பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின். 


விளக்கம் : குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்

நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை Today's Thought 


Hope is life - a short story today


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠


💠அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.


💠அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. 


💠ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.


💠பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 


💠அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.


💠அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். 


💠ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். 


💠திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.


💠அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.


💠ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.


💠உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.


💠அச்சமயத்தில் கொலம்பஸ் ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. 


💠அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது. தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.


💠கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவரின் பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.


*💠ஆம்,💠*


*💠மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம்.*


*💠வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.*


*💠ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..*


*💠நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.*


*💠எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.*

*உறுதியாய் நம்புங்கள்..உங்கள் கனவெல்லாம்* *பலிக்கும்., வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.....*


*💠 நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்*



Faith - Today's Short Story

 

நம்பிக்கை - இன்று ஒரு சிறு கதை - இன்றைய சிறுகதை 


Faith - Today's Short Story 


இந்த உலகத்தையே ஜெயிக்க வேண்டும் என்று புறப்பட்டார் அலெக்சாண்டர். ஒரு கட்டத்தில் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான வியாதி வந்துவிட்டது.


அவர் கூடவே வந்திருந்த கிரேக்க வைத்தியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. அது எந்த வகையான நோய் என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.


ஏனென்றால் இது அந்தப் பகுதியிலேயே இருப்பவர்களுக்கு வரக்கூடிய ஒரு வினோதமான நோய் ஆகையால் அந்த கிரேக்க வைத்தியர்களால் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை.


அலெக்சாண்டர் இருப்பதோ எதிரியினுடைய இடம். பாரசீக மன்னருடைய ஆளுகைக்கு உட்பட்ட இடம் அது. இந்த வியாதியை குணப்படுத்த என்ன செய்வது என்று அனைவரும் யோசனை செய்து செய்து கொண்டிருந்தனர்.


பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்து மருந்து கொடுத்தால் இந்த நோய் குணமாவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர், இருந்தாலும் எதிரி நாட்டுடைய வைத்தியரை அழைத்து எப்படி வைத்தியம் செய்வது என்று அங்கிருந்து அனைவரும் தயங்கினர். ஆனால் அலெக்சாண்டரோ அவரை வரவழைத்து வைத்தியம் பார்ப்பது என்று முடிவு செய்தார்.


முடிவு செய்தது மாதிரியே அரண்மனை வைத்தியரையும் அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பி விட்டார். அரண்மனைவைத்தியர் வந்து அலெக்சாண்டரை பரிசோதனை செய்துவிட்டு அலெக்சாண்டருக்கு வந்திருப்பது என்ன வகையான நோய் என்பதையும் கண்டுபிடித்து விட்டார்.


இந்த நோயை குணப்படுத்தி விடலாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை அதற்கு ஒரு மூலிகை ரசம் தயாரித்து கொண்டு வர வேண்டும், இன்று முடியாது நாளை மூலிகை ரசம் தயாரித்துக் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


சொன்னது மாதிரியே ரசம் தயாரித்து மறுநாள் கொண்டு வந்து விட்டார். இதற்கு இடையில் அலெக்சாண்டர் உடைய தளபதிகளில் ஒருவர் ரகசியமாக எச்சரிக்கை கடிதம் ஒன்று கொடுத்து அனுப்பி இருந்தார். அதில் அந்த வைத்தியர் கொண்டுவரும் மருந்தில் விஷம் இருப்பதாகவும், அந்த மருந்தை அருந்த வேண்டாம், என்றும் அதில் எழுதி இருந்தது.


இதை அலெக்சாண்டர் பார்த்துவிட்டு எந்தவித சந்தேகமும் இன்றி வைத்தியர் கொடுத்த மூலிகை ரசத்தை கடகடவென்று குடித்துவிட்டார்.


அதன் பிறகு அந்த கடிதத்தில் இருந்த விஷயத்தை அந்த வைத்தியரிடம் கூறினார். அதைக் கேட்ட வைத்தியர் ஒரு நொடி திகைத்து நின்று விட்டார் தன்மீது அலெக்ஸாண்டர் வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து அந்த வைத்தியருக்கு மிகவும் வியப்பாக இருந்தது.


வைத்தியர் கொடுத்தது என்னவோ சுத்தமான மூலிகைரசம் தான், அதில் விஷம் எதுவும் கலக்கவில்லை, அதன் பிறகு அந்த வைத்தியரை பார்த்து அலெக்சாண்டர் கூறினார், நம்பிக்கை என்ற அச்சாணியை வைத்துதான் இந்த உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, எனக்கு எதிரியாக இருந்தாலும் பாரசீக மன்னர் மிகவும் பெரியவர். அப்படிபட்டவர் அரண்மனையில் இருக்கும் அரண்மனை வைத்தியர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும், தொழில் நேர்மை இல்லாதவராக இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் அவரை அரண்மனை வைத்தியராக வைத்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான் நான் வைத்தேன், என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதற்கு தகுந்தாற்போல் நீங்களும் நடந்து கொண்டீர்கள் என்று அலெக்சாண்டர் கூறினார் .



ஒருவர் மீது *நம்பிக்கை* வைத்தால் அது உண்மையானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும். 


🌹இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்🌹


அதிசயத்தின் விலை - இன்றைய சிறுகதை

 

அதிசயத்தின் விலை - இன்று ஒரு சிறு கதை


The Price of Miracle - Today's short story



அதிசயங்கள் எந்த வடிவில் வேண்டுமானாலும் நடக்கலாம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


எட்டு வயது சிறுமி தன் பெற்றோர் மெல்லிய குரலில் அழுது கொண்டே பேசுவதை, பக்கத்து அறையில் இருந்து கேட்கிறாள்.


அவளுடைய இரண்டு வயது தம்பி உடல் நிலை மோசமாக இருப்பதால், மருத்துவ செலவு அதிகரிக்கிறது. இந்த வீட்டை விட்டு, இன்னும் சின்ன வீட்டிற்கு செல்ல வேண்டும்.


அதிக செலவுள்ள ஒரு அறுவை சிகிச்சை அவள் தம்பிக்க தேவைப்படுகிறது. அந்த அளவு கடன் கொடுக்க யாரும் இல்லை.


அழும் தன் தாய்க்கு தந்தை ஆறுதல் கூறியது அவள் மனதில் பதிந்தது.

ஏதேனும் அதிசயம் நடந்தால்தான்,

இவன் குணமாவான் என்று கூறினார்.


கேட்ட சிறுமி, தன்னுடைய உண்டியலை சத்தமில்லாமல் உடைத்தாள்.

பத்து டாலரும் 50 செண்டும் இருந்தன.


மெல்ல பின்பக்க கதவு வழியாக தெருவிற்கு வந்து, அங்கே இருந்த புகழ் பெற்ற மருந்து கடைக்கு சென்றாள்.


என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது. என் தந்தை தம்பியை பிழைக்க வைக்க அதிசயம் (Miracle) வேண்டும் என்றார். Miracle என்ன விலை ? இன்னும் பணம் வேண்டும் என்றாலும் முயற்சிக்கிறேன் என்றாள்.


Pharmacist வருத்தத்துடன், இங்கே Miracle கிடைக்காது பாப்பா என்று கூறினார்.


அருகில் நின்று கேட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர், எவ்வளவு பணம் வைத்து இருக்கிறாய் பாப்பா என்று கேட்டார்.


பத்து டாலர், 50 செண்ட் என்று சிறுமி கூறினாள்.


அவர் புன்னகையோடு Miracleன் சரியான விலை நீ வைத்திருக்கும் பணம். பணத்தை கொடு என்று வாங்கி கொண்டு,


வீடு எங்கே இருக்கிறது? என்று கேட்டு சிறுமியுடன் அவள் பெற்றோரை சந்தித்தார். சிறுவனையும் பரிசோதித்தார்.


அவர் புகழ் பெற்ற Neuro surgeon Dr.Carlton.

பிறகு நடந்தது ஆச்சரியம். ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது.


டாக்டர் சிகிச்சைக்கு எந்த கட்டணமும் வாங்கவில்லை.  அந்த சிறுமியை அணைத்துக்கொண்டு கூறினார். "10 டாலர் 50 சென்டில் Miracle வாங்கி தம்பியை குணப்படுத்தி விட்டாய். Good girl."


வீட்டிற்கு குணமான தம்பியை அழைத்து வந்த பிறகு, தாய் "இது அதிசயம். எவ்வளவு செலவானது என்று தெரியவில்லை என்றார்.


சிறுமி புன்னகைத்து தனக்குள் சொல்லி கொண்டாள்.


Miracle விலை 10 டாலர் 50 சென்ட். கூடவே அந்த சிறுமியின் அதீத நம்பிக்கை.


அதிசயங்கள் எந்த மனித வடிவில் வேண்டுமானாலும் வரலாம்.

எப்பொழுதும் மனம் தளராதீர்கள்.


Never lose your hope. Keep walking towards your vision 👍


Job satisfaction - Today's Short Story

 

செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை 


Job satisfaction - Today's Short Story 


இன்று ஒரு சிறு கதை


செய்யும் தொழில் மனத்திருப்தி

..................................


ஒரு கோவிலில் கல் தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.


ஒரு கல் தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக் கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. 


எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர்,


“ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?” என்றார்.


கல் தச்சர் சொன்னார்,


“எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் என்றார்..


வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்து விட்டுச் சொன்னார் -


எந்தச் சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே” அய்யா..


தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல் தச்சர் சொன்னார்


“அந்த சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதம் உள்ளது. ”என்றார்.

இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்க இருக்கிறீர்கள்?” 

- வழிப்போக்கர்.


“50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்” ,,

ஐம்பதடி உயரத்தில் இருக்கப் போகிற சிலையின் மூக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்களா?” என்ன என்றார் வழிப்போக்கர்.


தனது வேலையைச் சற்று நிறுத்தி விட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் 

கல்தச்சர் சொன்னார்,


“யார் கவனிக்கப் போகிறார்கள்? - எனக் கேட்கிறீர்கள்.


அய்யா,வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.


எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.


சேதம் சிறியதா? , பெரியதா? என்பது பற்றிக் கவலை இல்லை. செய்யும் தொழிலில் பிழை ஏற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்”. என்றார் அந்தக் கல் தச்சர்..


ஆம்,நண்பர்களே.,


உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வர வேண்டியது இல்லை.


அது தனக்குள்ளேயே இருந்து வர வேண்டும்.


அடுத்தவருக்காக வேலை செய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட, தன் மனத்திருப்திக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்…


Tree and parents - need love and warmth - today's short story



மரமும் பெற்றோரும் - தேவை அன்பும் அரவணைப்பும் - இன்றைய சிறுகதை 


Tree and parents - need love and warmth - today's short story


இன்று ஒரு சிறு கதை 



 ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு,


" ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!!


"அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!!


திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!!


"மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!!


சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!!


அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ,


"ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....?


உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!!


என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!!


ஆனால் ,

"என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான்.


கவலைப்படாதே ....!!


இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று,


" கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!!


என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!!


அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!!


மறுபடியும் அவன் வரவேயில்லை....!!


மரம் அவனுக்காக ஏங்கியது....!!


பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!!


அவன் முகத்தில் கவலை தெரிந்தது,


இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!!


அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம்.


"வா என்னிடம் வந்து விளையாடு"...!!


"இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது".....!!!


அதற்கு அவன்_

இல்லை இப்பொது வயதாகி விட்டது_...!!


எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்,


ஆனால் ,

"நாங்கள் வசிக்க சொந்தமாக

நல்ல வீடு இல்லை"....!!


"வீடு வாங்க என்னிடம் பணமில்லை",.....!


மரம் உடனே சொன்னது ,


பரவாயில்லை ....

"உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை".....!!


அதற்கு பதில்,

" என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் "....!!


"அதில் ஒரு வீடு கட்டிக்கொள்" என்றது.


அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான்.....!!


"இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே" .......!!


முடிந்த வரை,

" வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல்" என்றது.....!!


வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச் சென்றான்.....!!


அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை....!!


அவன் வருவான்.... வருவான்.... என்று மரமும் நித்தமும் காத்திருந்தது..... !!


பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.....!!


மரம் அவனை பார்த்து,

" ஆனந்த கூத்தாடியது"......!!!


அவன் எப்போதும் போல் ,

'சோகமாக இருந்தான்'.....!!


"ஏன் இப்படி இருக்கிறாய்",

என்று மரம் கேட்டது.....!!


"என் மீன் பிடி படகு உளுத்து விட்டது"....,


"படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை"......, !!


"அதனால் வருமானம் இல்லை"


"நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்" என்றான்.....!!


மரம் துடித்து போனது,.....!!


" நான் இருக்கிறேன்".....!!


"என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக் கொள்"......!!


"இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்" என்றது.....!!!


அவன் அடி மரத்தை வெட்டும் போது....,


மறக்காதே....!!


வருடத்திற்கு ஒரு முறை

என்றில்லாமல் ......,


"எப்போதாவது

என்னை பார்க்க வா".. என்றது....!!


ஆனால் அவன் வரவேயில்லை.....!!


மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.....!!!


அப்போது அவன் வந்தான்.....!!!


'தலையெல்லாம் நரைத்து' ,

'கூன் விழுந்து' ,

'மிகவும் வயதான தோற்றத்துடன்'... ,

அவன் இருந்தான்.....!!


"அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது"........!!!


"இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை".......!!!


"கிளைகள் இல்லை"........!!!


"அடி மரமும் இல்லை".........!!


உனக்கு கொடுக்க,

"என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது".........!!!


அவன் சொன்னான் ,


நீ..... 'பழங்கள் கொடுத்தாலும்' ,


அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை,......!!


வீடு கட்டவும் ,

படகு செய்யவும்

என்னிடம் சக்தி இல்லை....!!


"எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது" என்றான்.....!!!


அப்படியா....!!!


இதோ....,

" தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக் கொள்" என்றது....!!


"அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான்"......!!


இந்த சுகத்துக்கு தான்......


"அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது"..........!!


"இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது",.....!!


"அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது".......!!


"இது மரத்தின் கதையல்ல"....!!


" நம் பெற்றோர்களின் கதை"....!!


இந்த சிறுவனை போல் ,


"நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம்"...!!


வளர்ந்து பெரியவனானதும்...,


தமக்கென்று குடும்பம்,

குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம்.


அதன் பின் ,


"ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம்"........!!


"நம்மிடம் இருப்பவை எல்லாம்",


" அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்"🌳


"நம்மால் அவர்களுக்கு எதுவும்

கொடுக்க முடியாது"🌳


"நம்முடைய பாசம், அன்பு, அனுசரணையான வார்த்தைகளை தவிர"🌳


"அவர்கள் விரும்புவதும் அதைதான்"🌳


Honour is for the position - not for the man - Today's Short Story

 

 பதவிக்குதான் மரியாதை - மனிதனுக்கு இல்லை - இன்று ஒரு சிறுகதை 


Honour is for the position - not for the man - Today's Short Story 


நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்...


உயர் பதவிகளில் இருந்தபோது தீபாவளிக்கு பரிசுப் பொருட்களுடன் எனக்கு வாழ்த்து சொல்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர்.


அவர்கள் பரிசுப் பொருளாக அளித்தபல வகையான  இனிப்புகள், பாதாம் பிஸ்தா பேரீச்சை போன்றவை நிறைந்த பெட்டிகள், இன்னும் பிற பரிசுகள் என, ஒருவர் பின் ஒருவர் என என் அறையில் உள்ளே நுழைந்தால்! ஏதோ இனிப்பு பரிசு பொருட்கள் விற்கும் கடையைப் போல எனது அறை இருக்கும்.


என்னால் முடிந்தவரை என்னைச் சுற்றி இருப்போருக்கு வந்த பரிசுகளை பங்கிட்டு அளித்த பின்னும்! என் வீடு பரிசுப் பொருட்களால்  நிறைந்திருக்கும்.


நான் ஓய்வு பெற்றபின் வந்த முதலாண்டு தீபாவளிக்கு! நான் பணியில் இருந்த நினைவில்! 


எனக்கு ஏராளமானோர் பல பரிசு பொருட்களுடன் வாழ்த்துச் சொல்ல வருவர் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்!


யாருமே வரவில்லை.


நான் ஏமாந்து, விரக்தி அடைந்து மனதை வேறு பக்கம் திருப்பி! ஆன்மீக செய்தித்தாள் ஒன்றை படிக்கத் தொடங்கினேன்.


அதில் ஒரு சிறுகதையை அதிர்ஷ்டவசமாகப் பார்த்தேன்.


அந்தக்கதை சுமை தூக்கிச் செல்லப் பயன்படுத்தும் கழுதை பற்றியது.


ஒரு முறை அக்கழுதையின் மீது வழிபடும் தெய்வ உருவங்களை ஏற்றிச் செல்லும் பணியை கழுதையின் உரிமையாளர் செய்தார்.


பயணம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பல்வேறு இடங்களில் ஏராளமானோர்  கழுதையின் முன்னர் வந்து நின்று பயபக்தியுடன், மரியாதையுடன் வணங்கினர்.


இவ்வாறு தன்னை அனைவரும் வணங்குவதை கண்டு கழுதைக்கு மிகவும் மகிழ்ச்சி.. பெருமை !


தெய்வ வடிவங்களை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, திரும்பும் பயணத்தில் 


காய்கறி மூட்டையை அதன் முதுகில் ஏற்றி பயணத்தைத் தொடர்ந்தார் கழுதையின் உரிமையாளர்.


பயணத்தில் ஆங்காங்கே ஏராளமானோர் வந்து தன்னை மரியாதையுடன் கும்பிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த கழுதைக்கு! ஒரே ஆச்சரியம்.


யாரும் வந்து கழுதையை  வணங்கவில்லை.


வெறுத்துப்போன கழுதை பிறருடைய கவனத்தைக் கவர கத்தத் தொடங்கியது.


கடுப்பான உரிமையாளரும் பக்கத்தில் நின்றவர்களும் கழுதையை அடிக்கத் துவங்கினர். 


அவர்கள் அடிக்கும் போது எல்லோராலும் வணங்கப்பட்ட நான்! வரும் போது என்ன தவறு செய்தேன்? என்று கழுதை குழம்பியது !


கழுதையின் கதையைப் படித்த எனக்கு ஒரு ஞானோதயம் உதித்தது.


நான் உயர் பதவியில் இருந்தபோது  என்னை சந்தித்து வாழ்த்துச் சொல்லிப் பரிசளித்த அனைவரும், கடவுள் விக்கிரகங்களை வணங்கியவர்கள் தான்.


தன்னை வணங்கியதாக நினைத்த கழுதை போல, எனக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி பரிசு அளித்தவர்கள் அனைவரும்,அதுபோலத்தான் 


*நான் வகித்த பதவியின் அதிகாரத்திற்காக அதை செய்தார்களே தவிர எனக்கு இல்லை என்று*


அப்போது நான் புரிந்து கொள்ளவில்லை.


இந்தப் புரிதல் வந்தவுடன், பரிசுகளுடன் வாழ்த்து சொல்ல வருபவர்களை எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு! 


என் மனைவியுடன் இணைந்து சமையல் அறையில் அவளுக்கு உதவத் தொடங்கினேன்.


அவளிடம் கழுதைக் கதையை படித்து நான் பெற்ற ஞானோதயத்தை பகிர்ந்த போது அவள் பதில் சொன்னாள்...


அவ்வப்போது உங்களை நான் கழுதை என்று சொன்ன போது! என் மீது கோபப்பட்டீர்கள்?


இப்போது புரிந்திருக்கும் என்றாள்.


எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்று ஒரு சிறுகதை

 

எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் - இன்றைய சிறுகதை


You become what you think - Today's short story


#பேசி_பேசியே...


குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.


இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.


 நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். 


பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.


குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.


உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்.


பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.



புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.


அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?


பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.


"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.


மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.


அதுல சந்தேகமே இல்லை.


ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.


'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். 


அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான்.


அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.


எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.


பேசி ! பேசியே ஆளை வீழ்த்துவது இப்படித்தான்.


(இது போன்ற நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.)


பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது.


பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்

மிருகபலத்தோடு இருப்போம்.


பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம். பலவீனப்பட வேண்டாம்.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்


#வாழ்த்துகள்.


#வாழ்க_வளத்துடன்.


*சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள்🙏*


பெற்றோரின் தியாகம் - இன்று ஒரு சிறு கதை - Sacrifice of Parents - Today's Short Story...

 


பெற்றோரின் தியாகம் - இன்றைய சிறுகதை - Sacrifice of Parents - Today's Short Story...


தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான் 

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்